districts

img

தரமான சிமெண்ட் சாலை அமைத்திட வேண்டும்

வேலூர், அக்.7 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேலூர் வடக்கு வட்ட மாநாடு சத்துவாச்சாரியில் ஆர்.சாவித்திரி யம்மாள் நினைவு இல்லத்தில் நடைபெற்றது.  இம்மாநாட்டிற்கு வி.நாகேந்திரன், என்.கன்னியப்பன், எம்.வளர்மதி ஆகியோர் தலைமை தாங்கினர். மூத்த உறுப்பினர்ஏ.கோவிந்தசாமி கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.சீனிவாசன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.  தாலுகா செயலாளர் கே.பாண்டுரங்கன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.நாராயணன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். தீர்மானம் வேலூர் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைத்து தரமான சிமெண்ட், தார் சாலைகளை அமைத்துத் தர வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், அலமேலு மங்காபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக செவிலியர்களை நியமித்து மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும், வேலூர் விளாவடி ஏரி, ஏரியின் நீர் வரத்து கால்வாய்கள், வடிகால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வட்டக்குழு தேர்வு 9 பேர் கொண்ட வேலூர் வடக்கு வட்டக்குழுவின் செயலாளராக கே.பாண்டுரங்கன் தேர்வு செய்யப்பட்டார்.