கடலூர்,ஆக.25-
கடலூர் மாவட்டம் மற்றும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இயங்கிவரும் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 6ஆவது மாநாடு மற்றும் சாதனையாளர்கள் பாராட்டு விழா சனிக்கிழமையன்று (ஆக.26) நடை பெறுகிறது.
இதுகுறித்து அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களில் சிறப்பு தலைவர் எம். மருதவாணன் கடலூரில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
கடலூர் நகர மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த மாநாட்டில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், கடலூர் சட்ட மன்ற உறுப்பினர், மேயர், துணைமேயர் ஒன்றியதலைவர் அரசுஅதிகாரிகள் மாதர் சங்க தலைவர்கள் மற்றும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் மண்ணின் மைந்தர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கப் பட உள்ளனர். அதேபோல் கடலூர் நகரில் சுற்றுச்சூழல், போக்குவரத்து நெரிசல், பேருந்து நிலைய பிரச்சனை, சுகாதார சீர்கேடு, குடிநீர் பிரச்சினை, தெருவிளக்கு, சாலை, உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின் போது கூட்டமைப்பின் தலைவர் பாலு பச்சைப்பன், பொதுச் செயலாளர் பி. வெங்கடேசன், இணைப் பொதுச்செயலாளர் தேவநாதன், பொருளாளர் வெங்கட்ரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.