districts

img

தென்பெண்ணையாற்று கரையில் வெள்ள தடுப்புச் சுவர் அமைத்திடுக ஒன்றிய குழுவிடம் குடியிருப்போர் நலச் சங்கம் கோரிக்கை

கடலூர்,ஜன.25- பெஞ்சால் புயல், அதை ஒட்டி தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல்லாயிரக்க ணக்கான குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின மேலும் ஆயிரக்க ணக்கான ஏக்கர் விளை நிலங்களும் சேத மடைந்தன.  இந்த நிலையில், கடலூர் அருகே உள்ள அழகிய நத்தம், பகண்டை, குண்டு உப்பலவாடி, கண்டகாடு உள்ளிட்ட கிராமத்தில் ஒன்றிய அரசின்  மதிப்பீட்டு குழு ஆய்வு செய்தது. அப்போது, தசரதி தலைமையிலான குழுவிடம் கடலூர் நீர்வளத்துறை உட்கோட்ட பிரிவு அதிகாரிகள், பெண்ணையாற்று வெள்ளத்தால் கண்ட காடு கிராமத்தில் ஏற்பட்ட  சேதங்களை விரிவாக எடுத்துரைத்த னர். அதனை தொடர்ந்து, தென்பெண் ணையாற்றில் வெள்ளம் குடியிருப்பு பகுதிகளை பாதிக்காமல் இருப்பதற்கு நத்தப்பட்டு முதல் தாழங்குடா வரை  இருபுறமும் கான்கிரீட் வெள்ளத் தடுப்பு சுவர் கட்டவேண்டும்.  விலை நிலங்களில் ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட மணல் திட்டுகளை அகற்ற வேண்டும். பெண்ணையாற்றின் முழுமையாக தற்போதைய நிலையில் மறு அளவீடு செய்ய வேண்டும் என்று கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு  சிறப்பு தலைவர் எம்.மருதவாணன், பொதுச் செயலாளர் பி.வெங்கடேசன், பொரு ளாளர் வி.ரமணி, துணைத் தலை வர்கள் சண்முகம், தனுசு, எழிலரசன் ஆகியோர் கோரிக்கை மனு கொடுத்த னர்.