புதுச்சேரி, அக்.23- நகரப் பகுதிகளில் வசிக்கும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்க ளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு களை கட்டி கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி நகர மாநாடு வலியுறுத்தியுள்ளது. தோழர் தாட்சாயணி நினைவரங்கத்தில் நடைபெற்ற மாநாட்டில் மூத்த உறுப்பினர் கோவிந்தராஜ் செங்கொடியை ஏற்றி வைத்தார். மது, வீரா, வனஜா ஆகியோர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினர் சரவணன் வரவேற்றார். தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் மாநாட்டை துவக்கி வைத்தார். கட்சியின் மூத்த தலைவர் தா. முருகன், மாநில செயற்குழு உறுப்பி னர்கள் வெ.பெருமாள், ராமச்சந்திரன், பிரபுராஜ், சீனி வாசன், கொளஞ்சியப்பன், சத்யா வாழ்த்திப் பேசினர். செய லாளர் மதிவாணன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். வரவு-செலவு அறிக்கையை கலியமூர்த்தி தாக்கல் செய்தார். மாநிலச் செயலாளர் ராஜாங்கம் நிறை உரை யாற்றினார். முன்னதாக காமராஜர் சிலையில் இருந்து புறப்பட்ட செந்தொண்டர் ஊர்வலத்தை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் துவக்கி வைத்தார். நகரக்குழு மாநாட்டில் 9 உறுப்பினர்களை கொண்ட புதுச்சேரி நகரக்குழுவுக்கு செயலாளராக வி.ஜோதிபாசு தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் புதுச்சேரி நகரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய மேம்பாலங்களை அமைக்க வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் கட்டணப் கொள்ளையை தடுக்க கட்டண நிர்ணயக் குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.