மின்வாரிய ஊழியர்கள், அலுவலர்கள், பொறியாளர்களுக்கு 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு கோரிக்கைகள் பட்டியல் வெளியீடு நிகழ்ச்சி மின் ஊழியர் மத்திய அமைப்பு, பொறியாளர் அமைப்பு சார்பில் வேலூர் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ராணிப்பேட்டை திட்ட துணைத்தலைவர் ச.இன்பநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ெஜகன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று கள்ளக்குறிச்சி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திலும் கோரிக்கை பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.