districts

img

அணைக்கட்டு, கே.வி.குப்பம், பேரணாம்பட்டில் சார்பு நீதிமன்றம் அமைக்க கோரிக்கை

வேலூர், செப்.23 - வேலூர் மாவட்டத்தில் புதிதாக உரு வாக்கப்பட்ட வட்டங்களில் கருவூலம் மற்றும் சார்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வேலூர் மாவட்ட பிரதிநிதித்துவப் பேரவை மாவட்டத் தலைவர் டி.டி.ஜோஷி தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் கோ.பழனியம்மாள் துவக்கி வைத்தார். மாநிலச் செயலாளர் ஆ.அம்சராஜ் நிறைவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் அ.சேகர் வேலை அறிக்கையையும், பொருளாளர் சு.சுமதி வரவு-செலவு அறிக்கையையும் முன்வைத்தனர். ஜாக்டோ ஜியோ மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், தலைமை ஆசிரியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சினேகலதா ஆகியோர் வாழ்த்திப்பேசினர். சிறப்புக் காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித் துறையில் பணி யாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவி லியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப் பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அர சாணை 115-ன் மூலம் அரசு துறைக ளில் நிரந்தர பணியிடங்களை ஒழித்துக் கட்டுவது, மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை 139,152 ஆகிய வற்றை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சங்கத்தின் கொடி யேற்றப்பட்டு புதிய கல்வெட்டு திறக்கப்பட்டது.