திருவள்ளூர், ஜன.24- திருவள்ளூரை அடுத்த செவ்வா பேட்டை ரயில் நிலையத்தில் குடிநீர், கழி வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடன டியாக செய்து தர வேண்டும் என நடை பெற்ற ஆலோசனை குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து ள்ளனர். செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்தில் ஆலோசனை குழு கூட்டம் வெள்ளியன்று (ஜன.24), நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிலைய அதிகாரி திவாகர், தாஸ் விக்டர் ராஜ், இளநிலை பொறியாளர் கஜேந்திரன், ஆலோசனை குழு உறுப்பினர்கள் ரமணி, ரிஷிகேஷ், வெங்கடேஸ்வரலு, ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஆலோசனை குழு உறுப்பி னர்கள் செவ்வாய்பேட்டை ரயில்வே மேம் பாலம் பணிகள் நிறைவு பெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொது மக்களின் போக்குவரத்திற்கு சுரங்க பாதை அமைக்க வேண்டும். செவ்வாபேட்டை ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். வைஃபை வசதி, கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இரவு நேரங்களில் ரயில் நிலையத்தில் போலீசார் ரோந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இரண்டா வது நடைமேடையில் சேதமடைந்துள்ள இருக்கைகளை புதிதாக அமைத்து தர வேண்டும். தண்டவாளம் கடக்கும் போது விபத்துகளை தவிர்க்க ஒரு பகுதியில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கை ஒளியை முன் பக்கமும் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை உயர் அதிகாரி களுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என நிலைய அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.