districts

img

வடலூர் சேஷசாயி குடியிருப்பில் நிரந்தரமாக தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் :ஆட்சியரிடம் கோரிக்கை

கடலூர், அக்.2 – வடலூரில் சேஷசாயி தொழிற் சாலை குடியிருப்பில் நிரந்தரமாக தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலாளர் கோ. மாதவன்,  குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலாளர்  எம்.பி. தண்டபாணி, வடலூர் நகர செயலாளர் ஆர். இளங்கோவன் மற்றும்  சீனிவாசன் உள்ளிட்ட பொதுமக்கள்  கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித் துள்ள மனுவில் கூறியிருப்பதாவது. வடலூரில் இயங்கி வந்த சேஷ சாயி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தோருக்கு வழங்கிய குடியிருப்பில் 21 குடும்பங்கள் கடந்த 56 ஆண்டு களாக வசித்து வருகின்றனர். இடை யில் 1991ல் தொழிற்சாலையை மூடி விட்டார்கள். அதிலிருந்து எந்த வேலை யும் இல்லாமல் உள்ளனர். 56 ஆண்டு களாக ஷேசாயில் குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றனர். திடீரென்று செப்.2  அன்று ஜேசிபி இயந்திரம் மூலம்  தனிநபர் ஒருவர் கூறியதன் அடிப்படை யில் 8 வீடுகளை இடித்து விட்டனர். அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளி யூர் சென்றிருந்தனர். வீட்டில் பாத்திரங் கள் சாமான்கள் இருந்தது. அங்கு  குடியிருந்தவர்கள் இடிக்க கூடாது என்று கூறியும் கேட்காமல் இடித்த னர். அன்று மாலை3 மணிக்கு குறிஞ்சிப் பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரிடம் வீட்டை இடிக்க கூடாது என்று குடியிருப்பில் குடியிருப் பவர்கள் அனைவரும் சென்று மனு கொடுத்தனர்.வட்டாட்சியர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்தனர். வட்டாட்சியர் கூறியதைக் கேட்காமல்  மறுநாளே வீட்டை இடித்தனர்.  தொழிற் சாலை  முடியும் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய முழு தொகையும் கொடுக்கவில்லை.  வேலை இல்லாமல்  வறுமையிலும் கஷ்டத்திலும் வாழ்ந்து வருகின்றனர்.குடியிருப்பு பகுதியை ஏலம் எடுத்தவர்கள் யார்  என்று தெரிந்து கொண்டு ஆவணங் களை பார்த்து கூறுவதாக கூறினார். குடியிருப்பு சேஷசாயி பெயரில்தான் உள்ளது. எனவே தாங்கள் தலையிட்டு  தொழிலாளர் வாழ்ந்து வரும் வீட்டை தொடர்ந்து வாழ்வதற்கு குடியிருப்பு வீட்டை அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.