செங்கல்பட்டு, ஜன. 6- தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலாவதி யான பயிற்சி இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் மாற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது. தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத் தின் மாநில நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு விழா செங்கல்பட்டு அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் சங்க தேர்தல் ஆணையர் டி.கார்த் திகேயன் தலைமையில் வியாழனன்று (ஜன 6) நடை பெற்றது. முன்னாள் மாநிலத் தலைவர்கள் என்.சுப்பிர மணியன், சி.ராமலிங்கம், முன்னாள் தேர்தல் ஆணை யர் எஸ்.லோகநாதன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலை வர் மு.அன்பரசு, செங்கல் பட்டு மாவட்ட இணை செயலாளர் மு.தாமோதரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலத் தலைவர் எம்.சீனிவாசன், பொதுச் செய லாளர் என்.ரமேஷ், பொருளா ளர் என்.திருநாவுக்கரசு உள்ளிட்ட நிர்வாகிகள் பதவி யேற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தி யாளர்களை சந்தித்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என்.ரமேஷ் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்க ளில் காலியாக உள்ள 40 விழுக்காடு பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும், காலிப்பணி யிடங்கள் அதிக அளவில் உள்ளதால் பணிச்சுமையில் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகம் வழி காட்டுதலின்படி சான்றிதழ் தாரர்களுக்கு மற்ற மாநிலங்க ளில் வழங்கப்படுவது போல் முதல்வர் பதவி உயர்வு வழங்க வேண்டும், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங் களில் பணிபுரியும் தொழில் நுட்ப பணியாளர்கள் பதவி உயர்வின் போது, காலமுறை இடமாறுதலின் போதும், கலந்தாய்வு முறையில் இடமாறுதல் வழங்க வேண்டும், தொழிற்பயிற்சி நிலையங்களில் பணியாற் றும் பயிற்சி அலுவலர் மற்றும் பணியமர்த்தும் அலுவலர் பணியிடங்களை மற்ற மாநில ங்களைப் போல அரசி தழ் பதவி பெற்ற அதிகாரி யாகத் தரம் உயர்த்தவும், தொழிற்பிரிவு அலகுக்கு ஏற்றபடி புதிதாகப் பயிற்சி அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்க அரசு நட வடிக்கை எடுத்திட வேண் டும். 12 ஆண்டுகளாக பணி யாற்றும் ஒப்பந்த பணியா ளர்கள் அனைவரையும் கால முறை ஊதியத்தில் நிரந்தர பணியாளர்களாக பணி யமர்த்த வேண்டும் என வலியுறுத்தினர்.