districts

img

வடசென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு: கடல்நீரை குடிநீராக்கும் இயந்திரத்தை சீரமைக்க கோரிக்கை

சென்னை, பிப். 28- சென்னை காட்டுப்பள்ளி பகுதி யில் வடசென்னைக்கு கடல் நீரை  குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் குடி நீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 4 மாதங்களாக அங்கிருந்து குடி நீர் விநியோகம் ரத்து செய்யப் பட்டுள்ளது.  தற்போது கோடை காலம் தொடங்க உள்ளதால் வடசென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக் கின்றனர். சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 2010ஆம் ஆண்டு 600 கோடி ரூபாய் செலவில் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளி என்ற பகுதியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தொடங்கப்பட்டது. இந்த பகுதி யில் இருந்து மாதவரம், புழல், மணலி உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் விநி யோகம் செய்யப்படுகிறது. கடல் நீரை குடிநீராக்கும் இந்த நிலையத்தில் 5 அலகுகள் உள்ளன. மொத்தம் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்படுவது வழக்கம். ஆனால் மூன்று அலகுகள் பழுதான நிலையில் கடந்த 2ஆண்டு களாக 2 அலகுகள் மட்டுமே செயல் பட்டு வருகிறது. இந்நிலையில் நவம் பர் முதல் செயல்பட்டு வந்த இரண்டு அலகுகளும் இயந்திரம் பழுதானதால் தண்ணீர் சுத்திகரிப்பு முழுவதும் நிறுத்தப்பட்டது. கடந்த 4 மாதங்களாக எந்த பணியும் நடைபெறவில்லை என்றும், ஒப்பந்த ஊழியர்கள் 3 மாத மாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் பழு தான இயந்திரத்தில் மின் மோட்டார் பழுது, கார்பன் பில்டர், மைக்ரோ பில்டர், குழாய் உடைப்பு, உள்ளிட்ட பழுதுகளை சீரமைக்க தேவையான பொருட்கள் இல்லை. அதை உடனடி யாக மாற்ற நடவடிக்கை எடுக்காத தால் தண்ணீர் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அங்குள்ள ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராக் கும் ஆலை பழுதானதால் கடந்த 4 மாதங்களாக வடசென்னை பகுதிக்கு குடிநீர் அனுப்பவில்லை. இதனை சமா ளிக்கும் வகையில் புழல் ஏரியில் இருந்து குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில் வட சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் ஏற்பட்டு ள்ள இயந்திர பழுதுகளை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.