திருவள்ளூர், அக் 2- தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்களின் மாநில ஒருங்கிணைப்பு குழுவின் பேரவை கூட்டம் ஞாயிறன்று (அக் 1), திருவள்ளூரில் புதுவாழ்வு திட்ட மாவட்டத் தலைவர் எசேக்கியேல் ஏகாம்பரம் தலைமையில் நடைபெற்றது. இதில் சேலம், செங்கல்பட்டு, திரு வள்ளூர் உள்ளிட்டு மாநிலம் முழுவதிலு மிருந்து ஊழியர்கள் கலந்து கொண்ட னர். இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் திருவரங்கன் சிறப்புரை யாற்றினார். தமிழ்நாடு வாழ்வாதார இயக்க பணியாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.தமிழரசு, மாநில ஒருங்கிணைப் பாளர்கள் ஏ.நாகராஜ், டி.சீனிவாசன், சேலம் மாவட்டத் தலைவர் சீனிவாசன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் சத்தியமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் சுமதி, ஆகியோர் பேசினர். திருவள்ளூர் மாவட்ட செயலாளர் வனிதா நன்றி கூறினார். தீர்மானங்கள் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார மேலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதியத்தை அரசே வங்கி கணக்கில் செலுத்த வேண்டும், பணி மதிப்பீடு முறையை கைவிட வேண்டும், விபத்து மற்றும் உடல் நலம் குன்றிய வர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், 8 மணி நேர வேலையை நடைமுறை படுத்த வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்துடன் இணைந்து அடுத்த கட்ட போராட்டங்களை மேற்கொள் ளுதல் போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.