மின் கணக்கீடு மாதம் தோறும் எடுக்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவொற்றியூர் பகுதிக்குழு சார்பில் எர்ணாவூர் மார்க்கெட் அருகே கிளைச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், பகுதி செயலாளர் எஸ்.கதிர்வேல், நிர்வாகிகள் கே.வெங்கடையா, தனலட்சுமி, ரா.மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.