சிதம்பரம் வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 76-ஆவது குடியரசு மற்றும் விளையாட்டு தின விழா நடைபெற்றது. இதில் பள்ளியின் தாளாளர் எஸ். குமார் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளியின் இணைத்தாளாளர் ரூபியாள்ராணி, குமராட்சி ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் நடராஜன், குமார், கோமதி பள்ளியின் முதல்வர் லியோபெஸ்கிராவ் உள்ளிட்ட ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்நு வழங்கினர். இதனை தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.