districts

மின் மீட்டருக்கு வாடகை கட்டணம் வணிகர் பேரமைப்பு எதிர்ப்பு

சென்னை, ஆக. 3-

      மின் மீட்டருக்கு வாடகை கட்டணம் விதிக்கப்படுவது கைவிட வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

     இதுகுறித்து மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

     தமிழகத்தில் கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பு மீட்டர்களுக்கு மாதம் ரூ60 என இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.120 வாடகை வரும் செப்டம்பர் மாதம்  முதல் வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதற்கு  வணிகர் பேரமைப்பு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் இருமுறை மின் கட்ட ணம் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், வணிகர், தயாரிப்பாளர்கள், உரிமை யாளர்கள் என அனைவருக்கும் பெரு நிதிச் சுமையை ஏற்படுத்தி அன்றாட வணிகத்தி லும் வாழ்விலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

     இந்தச்சூழலில் தற்போது மின்சார மீட்டருக்கு மாத வாடகை வசூலிக்க மின்சார  வாரியம் எடுத்துள்ள முடிவு பொதுமக்க ளையும், வணிகர்களையும் அதிர்ச்சிக்குள் ளாக்கியுள்ளது. தற்போது ஒருமுனை (சிங்கிள் பேஸ்) போர்டுகளுக்கு ரூ 300, மும்முனை இணைப்புக்கு ரூ.720 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.  அதை யும் அதிகப்படுத்த மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளதாக தெரியவருகிறது.  இந்த நடவடிக்கைகள் ஏற்கெனவே நிதிச்சுமையில் உள்ள வணிகர்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதோடு, வணி கத்தை விட்டு வெளியேறும் நிலை உருவாகி விடக்கூடாது என்பதை தமிழ்நாடு  அரசு கவனத்தில் கொண்டு, மின்மீட்டர் வாடகை, மின் இணைப்பு சாதனங்களுக்கு கூடுதல் கட்டணம் போன்றவற்றை தவிர்த்து, பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நலன் காத்திடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், ஜி.எஸ்.டி துறையில் அமலாக்கத் துறையை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும், அதிகபட்ச 28விழுக்காடு வரியை குறைக்க வலியுறுத்தியும் தென் மண்டலம் சார்பில் தமிழ்நாடு, பாண்டிச் சேரி, கேரளா கர்நாடகா உள்ளிட்ட வணிக நிர்வாகிகள் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சந்தித்து முறையிட இருக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.