சென்னை, ஜூன் 8- கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளதால், வீடுகளில் பணியாற்றும் ஐடி நிறுவன ஊழியர்கள் உட்பட பல்வேறு நிறுவன ஊழியர்கள் அலுவலகங்களுக்கு திரும்பி வரு கின்றனர். இதனால் சென்னையில் வாடகை வீடுகள் நிரம்பி வருகிறது. இதன் மூலம் 15 விழுக்காடு வீட்டு வாடகை உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னையில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடங்களில் பெரும் பாலானவை ஐடி நிறுவனங்கள் தான் செயல்படுகின்றன. அந்த அளவுக்கு சென்னையை ஆக்கிரமித்துள்ள இந்த ஐடி நிறுவனங்கள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பரபரப்பில்லாமல் அடங்கி கிடக்கின்றன. காரணம், அதில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரின் பாதுகாப்பு கருதி வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டது. இதனால் பல ஆயிரங்களை சம்பளமாக வாங்கும் ஊழியர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். ஆனால் தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பு குறைவாக இருப்பதாலும் ஐடி நிறு வனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழி யர்களை அலுவலகம் வருவதற்கு அறிவுறுத்தி உள்ளது. டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் பல ஊழியர்களைப் பல மாதங்க ளுக்கு முன்பாகவே சுழற்சி முறை யில் அழைத்துள்ளது. மேலும் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை கட்டாயம் அலுவலங்களுக்கு வருவதற்கான நடைமுறைகளை கட்டாயப்படுத்தி வருகிறது. இதனால் சொந்த ஊர்களில் பணிபுரிந்த பலர் சென்னைக்கு இடம்பெறத் தொடங்கியுள்ளனர். இவர்களின் வருகையால் சென்னையில் காலியாக கிடந்த வாடகை வீடுகள் அனைத்தும் நிரம்பத் தொடங்கியுள்ளன. கடந்த காலங்களில் அந்த வீடு கள் எல்லாம் மிக குறைந்த வாட கைக்கு கொடுத்தாலும், அதில் குடியேற யாரும் தயாராக இல்லாததால் அவை பல மாதங்களாக காலியாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது வாடகை வீடுகளுக்கான டிமாண்ட் எகிற தொடங்கியதால் அதற்கு ஏற்றவாறு வாடகை தொகையையும் வீட்டு உரிமையாளர்கள் ஏற்றி வரு கின்றனர். அப்படி இருந்தும் இந்த வீடுகள் அனைத்தும் நிரம்பத் தொடங்கியுள்ளது. இதனால் சென்னையில் வாடகை குடியிருப்பு கட்டணம் விகிதம் 5 முதல் 15 விழுக்காடு என்ற அளவில் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.