கிருஷ்ணகிரி, அக்.21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஓசூர் மாநகர குழு 9 வது மாநாடு ஞாயிறன்று (அக்.20) நடை பெற்றது. மூத்த உறுப்பினர் சி.முத்து செங்கொடியை ஏற்றி வைத்தார். என்.ஸ்ரீதர் வரவேற்றார். மாநாட்டிற்கு பி.ஜி. மூர்த்தி, நாரா யண மூர்த்தி, ஜேம்ஸ் ஆஞ்சல மேரி ஆகியோர் தலைமை வகித்தனர். எம்.எம்.ராஜு அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு துவக்கி வைத்தார். செயலாளர் சி.பி.ஜெயராமன் வேலை அறிக் கையை சமர்ப்பித்தார். செயற்குழு உறுப்பினர் சுரேஷ் வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் நிறைவுரையாற்றினார். மாநகரக்குழு தேர்வு 10 பேர் கொண்ட மாநகர குழுவின் செயலாளராக எம்.ஜி.நாகேஷ்பாபு தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட தலைமை மருத்துவ மனையாக மாற்றப்பட்ட ஓசூர் அரசு மருத்துவமனை மருத்து வர்கள் செவிலியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும். புறநோயாளிகளுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டும். மாநகராட்சி முழுவதும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓசூர் கிருஷ்ணகிரி ஜோலார் பேட்டை ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.