சென்னை, ஏப். 20 - காவல்துறையில் 90 விழுக்காடு அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ள னர் என்று தனி நீதிபதி தெரி வித்த கருத்தை இரண்டு நீதி பதிகள் கொண்ட அமர்வு நீக்கியது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது, காவல்துறையில் 90 விழுக் காடு அதிகாரிகள் ஊழல் வாதிகளாகவும், திறமை யற்றவர்களாகவும் உள்ள னர். ஊழல் அதிகாரிகளை களைந்து, திறமையற்ற வர்களுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய நேரம் இது என தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த கருத்துக்களை நீக்கக் கோரி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பி.என். பிரகாஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிபி சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்த பின்பு, வழக்கின் எல்லைக்கு அப்பாற்பட்டு, இதுபோன்ற கருத்துக்களை தனி நீதிபதி தெரிவித்திருப்பது சட்டத்தின்படி ஏற்கத்தக்க தல்ல என்று வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தனி நீதிபதியின் கருத்துக்களை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.