districts

பேனர்களை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை

சென்னை,மே 29-  

    சென்னை சாலையோரங்களில், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் தொடர்ந்து வைக்கப்படுவதை தடுக்க  சென்னை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வுள்ளது.

    சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகள், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். பேனர்களை தாங்கி நிற்கும் இரும்பு, மரப்பலகைகளையும் அகற்ற வேண்டும். சாலையோரம் குவிக்கப்படும் பொருட்களை அப்புறப்படுத்தி பாதுகாத்து வைத்து ஏலத்தில் விட வேண்டும். சுவற்றில் ஒட்டப்படும் சுவரொட்டிகளை அகற்றி வண்ண ஓவியம் வரைந்து அழகுபடுத்த வேண்டும். 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான விவரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்ற வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.