கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதித்த ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில மக்களுக்கு உதவும் வகையில் வேலூர் விஐடி தொழில்நுட்ப பல்கலைக் கழகம் சார்பில் அதன் நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ. விசுவநாதன் நிவாரணம் ரூ.1 கோடியே 57 லட்சத்து 50 ஆயிரத்திற்கான வரைவோலையை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் விஜயவாடாவில் வழங்கினார். அதேபோல்,தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் 1 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை ஐதராபாத்தில் வழங்கினார். விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் உடனிருந்தார்.