districts

img

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் உபரிநீர் திறப்பு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை, டிச. 9- சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழ வரம், கண்ணன்கோட்டை தேர்வாய்  கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயி ரத்து 757 மி.கனஅடி (11.7 டி.எம்.சி.) தண்ணீர் சேமித்து வைக்கலாம். வடகிழக்கு பருவ மழை தீவிர மடைந்து பலத்த மழை பெய்ததை தொடர்ந்து கடந்த மாதத்தில் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. பின்னர் பலத்த மழை இல்லாததால் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் வங்கக் கடலில் மாண்டஸ் புயல் உருவானதை யடுத்து கடந்த 2 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்க ளில் தொடர்ந்து மழை பெய்து வரு கிறது. இதனால் ஏரிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரி யின் நீர்மட்டம் 20 அடியை தாண்டி (மொத்த உயரம் 24 அடி) நிரம்பி உள்ளது. கனமழை நீடித்தால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி உபரிநீரை மீண்டும் திறந்துவிட முடிவு செய்யப்பட்டு, வெள்ளிக் கிழமை முதல்கட்டமாக 100 கன அடி தண்ணீர் திறந்து விடப் பட்டது. செம்பரம்பாக்கம் ஏரி யில் இருந்து உபரி நீர் திறக்கப் பட்டுள்ளதையடுத்து தண்ணீர் வெளி யேறும் அடையாறு ஆற்று கரை யோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பொதுமக்கள் கவ னமுடன் இருக்க மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் பலத்த மழை காரணமாக புழல், பூண்டி ஏரிகளில் இருந்தும் வெள்ளிக்கிழமை உபரி நீர் திறக்கப்பட்டது. புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி. இதில் 16.89 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,300 மி.கனஅடியில் 2,386 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி ஏரிக்கு 140 கனஅடி தன்ணீர் வருகிறது. பூண்டி ஏரியில் இருந்தும் 100 கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. ஏற்கனவே பூண்டி ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்ட லேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதி கரித்தபடி உள்ளது. எனவே ஏரி யில் இருந்து கூடுதலாக உபரி நீரை திறக்க அதிகாரிகள் திட்ட மிட்டு உள்ளனர். பூண்டி ஏரிக்கு வெள்ளிக்கிழமை காலை நிலவரப் படி 595 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரியின் மொத்த உயரம் 35 அடி. இதில் 33 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,231 மி.கனஅடிக்கு நீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மி.கனஅடி. இதில் 539 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 36 கன அடி மட்டும் தண்ணீர் வருகிறது. கண்ணன்  கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடி நிரம்பி உள்ளது. புழல், பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்புடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சி யர் ஆல்பி ஜான் வர்கிஸ் அறி வுறுத்தியுள்ளார். பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் முறையாக பூண்டி, புழல், செம்பரம் பாக்கம் ஆகிய 3 ஏரிகளில் இருந்தும் ஒரே நாளில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.