districts

img

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கனஅடி தண்ணீர் திறப்பு

காஞ்சிபுரம், அக். 7- செம்பரம்பாக்கம் ஏரி 22 அடி நெருங்குவதால் ஞாயிற்றுக்கிழமை முதல் கட்டமாக 100 கன அடி உபரி நீர் வெளியேற்ற மாவட்ட ஆட்சி யர் உத்தரவிட்டுள்ளார். மேலும்  கரையோர மக்களுக்கு வெள்ள  அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள் ளது. சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கக் கூடியது செம்பரம்பாக்கம் ஏரி. தொடர்ந்து பெய்து வரும் மழை  மற்றும் கிருஷ்ணா நதிநீர் வருகை யால் ஏரியில் நீர் நிறைந்து காணப்படு கிறது. சனிக்கிழமை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 21.96 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3,110 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. நீர்வரத்து 231 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 22 அடியை எட்ட இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி ஞாயிற்றுக்கிழமை முதற்கட்டமாக 100 கன அடி உபரி நீரை வெளி யேற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  கலைச்செல்வி மோகன் உத்தர விட்டுள்ளார். மேலும் கரையோரம் வசிக்கக்கூடிய வழுதலம்பேடு, அனகாபுத்தூர், கெருகம்பாக்கம், மணப்பாக்கம் உள்ளிட்ட கரை யோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டு அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வந்து கொண்டி ருப்பதால், நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அது மட்டுமின்றி பருவமழை தொடங்க உள்ள நிலையில், திடீரென அதிகளவு நீர் வந்தால் செம்பரம்பாக்கம் ஏரியி லிருந்து உபரிநீர் அதிகமாக திறப்பதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிறன்று 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அதுமட்டுமின்றி சிக்கராயபுரம் கல்குவாரி முழுவதும் நீர் நிறைந்து  காணப்படுவதால் அதிலிருந்து தற்போது தண்ணீர் எடுக்கப்படுகி றது. பருவமழைக்கு முன்பு செம்பரம் பாக்கம் ஏரி நீர்மட்டத்தை சற்று குறைத்து வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.