districts

img

கொரோனா காலத்தில் பணிபுரிந்த இயன்முறை மருத்துவர்களுக்கு, நிரந்தர பணிக்கான தேர்வின் போது ஊக்க மதிப்பெண் அளிக்க வேண்டும்

கொரோனா காலத்தில் பணிபுரிந்த இயன்முறை மருத்துவர்களுக்கு, நிரந்தர பணிக்கான தேர்வின் போது ஊக்க மதிப்பெண் அளிக்க வேண்டும், ஊதியத்தை 35 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூலை 16) சென்னையில் தமிழ்நாடு தேசிய நல குழும (ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும்) இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுக நயினார், எம்.ராமகிருஷ்ணன், இந்திய மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சம்மேளன பொதுச் செயலாளர் ரமேஷ்சுந்தர் உள்ளிட்டோர் பேசினர்.