சென்னை,ஜூலை 7
ரத்தக்குழாய் அடைப்பு குறித்து மக்களிடம் போது மான விழிப்புணர்வு இல்லை என்று மாநில சுகாதாரத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.
சென்னையில் காவேரி மருத்துவமனை சார்பில் கால் உறுப்பு அகற்றம் இல்லாத் தமிழ்நாடு என்ற இயக்கத்தைச் சென்னை யில் தொடங்கி வைத்து பேசிய அவர். அதிகமாகப் புகைபிடிப்பது கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சி யின்மை உள்ளிட்ட காரணங் களால் இதயம், மூளை, கால் களுக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகின்றன. பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு இதற்கான வாய்ப்பு அதிக மாக உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் என்ற மாநில அரசின் திட்டத்தின் கீழ் மக்களிடம் சோதனை நடத்தியபோது உயர் அழுத் தம் நீரிழிவு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. அப்படித் தெரியவந்தவுடன் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மக்கள் நல்வாழ்வு மையங்களில் மருந்து சாப்பிட அறிவுறுத்த ப்பட்டுள்ளது.
மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் இதுவரை ஒருகோடிக்கும் அதிகமாக மக்களுக்குச் சோதனை செய்யப்பட்டுள் ளது. ரத்தக்குழாய் அடைப்பு வரும் வரை காத்திராமல் ஆரம்பத்திலேயே சோதனை யில் கண்டறிந்து உடனே மருந்து சாப்பிட்டால் எதிர் காலத்தில் கால் கைகளை அகற்றவேண்டிய நிலை ஏற்படாது என்றார்.
முன்னதாக பிரபல ரத்தக் குழாய் அடைப்பு நீக்க அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சேகர் பேசுகையில், நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் ரத்தக் குழாய் அடைப்பு இருப்பது கண்ட றிந்தால் உடனே சிகிச்சை பெற வேண்டும் என்றார். இல்லையென்றால் அது தீவிரமாகி கால்களை அகற்றவேண்டிய நிலை ஏற்படலாம் என அவர் எச்சரித்தார். புகைபிடிப்பது, நீரிழிவு உள்ளிட்டவை ரத்தக் குழாய் அடைப்புக்குக் காரணமாக உள்ளது என்றும் அவர் கூறினார். நாட்டில் ரத்தக் குழாய் அடைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் கள் மிகக்குறைந்த அளவி லேயே உள்ளனர். தமிழ கத்தில் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைகளிலும் இந்த பிரிவை அரசு தொடங்க வேண்டும், ஒருசில மருத்துவக்கல்லூரிகளில் மட்டுமே இந்தப்பிரிவு உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். ஆண்டு தோறும் ஆகஸ்ட் 6 ஆம் தேதியை ரத்தக்குழாய் அடைப்பு விழிப்புணர்வு நாளாக அதிகாரப் பூர்வ மாகத் தமிழக அரசு அறி விக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக காவேரி மருத்துமனையின் தலைவர் டாக்டர் அரவிந்த் செல்வ ராஜ். மருத்துவ இயக்கு நர் டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி உள்ளிட்டோர் பேசினர்.