districts

img

5 ஆயிரம் பேருந்துகள் குறைப்பு

சென்னை, அக். 10 - 5 வருடத்தில் 5 ஆயிரம் பேருந்து களின எண்ணிக்கையைஅரசு குறைத் துள்ளது. பயணிகளின் பயண உரிமை யை பறிக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம் மேளன பொதுச்செயலாளர்  ஏ.ஆறுமுக நயினார் வலியுறுத்தி உள்ளார். மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர், நடத்து நர்களை நியமிக்க எதிர்ப்பு தெரி வித்தும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க கோரியும் செவ்வாயன்று (அக்.10) மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதன் ஒருபகுதியாக, சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் சம்மேளன பொதுச் செயலாளர் கே. ஆறுமுகநயினார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போக்குவரத்து கழகத்தில் 23 ஆயிரம் பேருந்துகள், நாளொன்றுக்கு 94 லட்சம் கி.மீ.தூரம் இயங்கி வந்த நிலையில் அரசு புள்ளிவிவரப்படி, தற்சமயம் 18 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதாவது 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் பேருந்து கள் குறைக்கப்பட்டுள்ளது. அந்த 18 ஆயிரம் பேருந்துகளில் கூட ஊழியர் பற்றாக்குறையால் 2ஆயிரம் பேருந்து கள் இயக்கப்படுவதில்லை. உண்மை யில், 16 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே  இயக்கப்படுகிறது. உதாரணமாக சென் னையில் பேருந்து நிறுத்தங்களில், பேருந்துக்காக பயணிகள் 30-45 நிமி டங்கள் காத்துகிடக்கும் நிலை உரு வாகி உள்ளது. போக்குவரத்து கழகத்தில் சில நூறு பேரை ஊழியர்களை நியமிக்க அர சாணை வெளியிடப்பட்டது. ஆனாலும், அது அமல்படுத்தப்படாமல் உள்ளது. பொதுப்போக்குவரத்து குறைக்கப் பட்டு வருகிறது. போக்குவரத்து துறை படிப்படியாக சீரழிக்கப்பட்டு வருகிற நிலை உருவாகி உள்ளது. அரசு, போக்குவரத்து கழகத் திற்கு தேவையான நிதியை ஒதுக்கா மல் உள்ளது. ஒரு ரூபாய் வசூலா னால், 10 பைசா வரை வட்டிக்கு செலுத்தும் நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து கழகங்களில் தொழி லாளர்களின் பணத்தை எடுத்து 12ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளன. வருங்கால வைப்பு நிதி, கூட்டுறவு சங்கங்களுக்கு பிடித்தம் செய்த தொகை செலுத்தப்படாததால், தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பலன் கிடைக்கவில்லை.

ஓய்வூதியர் களுக்கு 7 வருடமாக அகவிலைப்படி உயர்த்தப்படாமல் உள்ளது. அரசின் நட வடிக்கைகளால் பணியில் உள்ள தொழி லாளர்களும், ஓய்வூதியர்களும் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து கழகங்கள் சீர் குலைக்கப்பட்டு, பயணிகளின் பயண  உரிமை பறிக்கப்படுகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு இலவச மின்சாரமும், தடையற்ற போக்குவரத்தும்தான் அடிப்படையாக இருந்தது. போக்கு வரத்து கழகங்களை சீரழிப்பதால் தமிழ கத்தின் வளர்ச்சி தடைபடும். எனவே, போக்குவரத்து கழகங் களை முறைப்படுத்த வேண்டும். ஏற்கெனவே இயக்கப்பட்ட எண்ணிக் கையில் பேருந்துகளை இயக்க வேண்டும், ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெற்றவர் களை மீண்டும் பணிக்கு எடுக்க கூடாது,  தொழிலாளர் பணத்தை எடுத்து நிர்வா கம் செலவிடக் கூடாது, ஊதிய ஒப்பந்த  பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார். போராட்டத்திற்கு அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரை, பொதுச்செயலா ளர் வி.தயானந்தம், பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி, நிர்வாகிகள் கருணா நிதி, இளங்கோ, செங்குட்டுவன் உள்ளிட்டோர் பேசினர்.