districts

img

கடலோர நகரில் செங்கொடி சாதனைகள்! புதுச்சேரியின் வாசல் நகரம் - மு.ஃபர்கத் சுல்தானா

கி ழக்கு கடற்கரை சாலை யில் அமைந்துள்ள கோட்டக் குப்பம் நகராட்சி, சென்னை-புதுச்சேரி நெடுஞ்சாலையின் முக்கிய பாதை யில் அமைந்துள்ளது. புதுச்சேரி நகரா ட்சிக்கும் உழவர்கரை நகராட்சியின் காலாப்பட்டு பகுதிக்கும் இடையே வங்கக் கடலோரம் அமைந்திருக்கும் இந்நகரம், விழுப்புரத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் வடக்கு எல்லை யில் அமைந்துள்ள இந்நகரம், புதுச் சேரிக்கான நுழைவு வாயிலாகத் திகழ்கிறது.

இயற்கை எழிலும்  வரலாற்று சிறப்பும்

பரந்து விரிந்த தென்னந்தோப்பு களால் சூழப்பட்ட கோட்டக்குப்பம், அழகிய கடற்கரைகளால் கோலம் போடும் தமிழக நகரமாகும். சின்ன கோட்டக்குப்பம், இந்திரா நகர், ரஹமத்  நகர், சின்ன முதலியார் சாவடி, பெரிய முதலியார் சாவடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்நகரில் காவல் நிலை யம், பேருந்து நிலையம், நகராட்சி  அலுவலகம், வங்கிகள் போன்ற  அடிப்படை வசதிகள் நிறைந்துள்ளன. 1867-ல் ஆற்காடு நவாப்பால் கட்டப் பட்ட ஜாமியா மஸ்ஜித் இந்நகரின் வர லாற்று சின்னமாக திகழ்கிறது. நல்லிணக்கத்தின் நிலவுதல் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை யாக வாழும் இந்நகரம், சுதந்திரப் போராட்ட காலத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. பிரெஞ்சு காலனி ஆட்சியின் போது, மக்கள் தலைவர் வா.சுப்பையாவை கைது செய்ய முயற்சித்தபோது, அவரை பாதுகாத்து தலைமறைவு வாழ்க்கைக்கு உதவிய பெருமை கோட்டக்குப்பத்திற்கு உண்டு. நூறு  ஆண்டுகள் பழமையான நூலகத் தையும், சமூக நல்லிணக்கத்தின் சின்ன மாகவும் திகழும் இந்நகரம், 2021-ல் பேரூராட்சியிலிருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

உரிமைப் போராட்டங்களின் வரலாறு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த பல பத்தாண்டுகளாக மக்கள் நலனுக்காக குரல் கொடுத்து வரு கிறது. 2004-ல் சிஐடியு இரும்பு வியா பாரிகள் சங்கம், சாலை போக்கு வரத்து தொழிலாளர்கள் சங்கம், ஆட்டோ தொழிலாளர்கள் சங்கங்கள் தொடங்கப்பட்டு, தொழிலாளர் உரி மைகள் பாதுகாக்கப்பட்டன. கட்சி யின் முதல் நகர கிளை செயலாள ராக எம்.ஏ.அஷ்ரப் அலி சிறப்பாக பணி யாற்றினார். 2008-ல் தொடர் மின்வெட்டுக்கு எதி ரான போராட்டத்தை முன்னெடுத்து, பொதுமக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்ட நிகழ்வு குறிப்பிடத்தக் கது. இதன் விளைவாக, அப்போதைய முதல்வர் கலைஞர் மின்வெட்டு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். கல்வி மேம்பாட்டுப் போராட்டங்கள் கோட்டக்குப்பம் அரசு உயர் நிலைப் பள்ளியை மேல்நிலைப்பள்ளி யாக தரம் உயர்த்த நடத்திய போராட் டம் வெற்றி கண்டது. இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், இந்திய மாண வர் சங்கம் ஆகியவை உருவாக்கப் பட்டு, ரத்த தானம், விளையாட்டு போட்டிகள், இளைஞர் – மாணவர் உரிமைக்கான போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன.

தேர்தல் வெற்றியும் மக்கள் சேவையும்

2006, 2011 ஆம் ஆண்டுகளில் சொற்ப வித்தியாசத்தில் தோல் வியைத் தழுவிய கட்சி, தொடர்  மக்கள் நலப் பணிகளால் மக்களின் நம்பிக்கையை பெற்று, 2022 நகர்மன்றத் தேர்தலில் 18-வது வார்டில் மு.ஃபர்கத் சுல்தானா  வெற்றி பெற்றார். அடிப்படை வசதிகளில் முன்னேற்றம் நகர்மன்ற உறுப்பினராக பொறுப் பேற்றதும், 18-வது வார்டில் பல முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப் பட்டன: - ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் தொடக்கப் பள்ளியின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன - புதிய அங்கன்வாடி கட்டிடம் மற்றும் நகர்புற நல்வாழ்வு மைய கட்டிடம் கட்டப்பட்டது - அனைத்து தெருக்களுக்கும் புதிய சாலைகள் அமைக்கப்பட்டன - மூன்று ஆண்டுகளில் மட்டும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன

மக்கள் நலனில் முன்னுரிமை

1,660 குடும்ப அட்டைகளை கொண்ட ரேஷன் கடையை இரண்டாக பிரித்து மக்களின் வசதிக்கேற்ப புதிய கடைகள் திறக்கப்பட்டன. குறைந்த அழுத்த மின்சார பிரச்சனையை தீர்க்க  அனைத்து தெருக்களிலும் புதிய மின் கம்பிகள் மாற்றப்பட்டு, புதிய மின் மாற்றி நிறுவப்பட்டது. குரங்கு தொல்லையை தடுக்க வனத்துறை யுடன் இணைந்து நடவடிக்கை எடுக் கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து அங்கன்வாடி யில் கண்காணிப்பு கேமரா பொருத்தப் பட்டது. பெஞ்சால் புயலின் போது குடி நீர் தட்டுப்பாட்டை சமாளிக்க டேங்கர் லாரி மூலம் வீடுகளுக்கு தண்ணீர் விநி யோகிக்கப்பட்டது. மக்களின் கோரிக் கைகளுக்காக 72 மனுக்கள் சமர்ப் பிக்கப்பட்டன. எதிர்ப்புக்குரலாய் சிபிஎம் தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு எதிராக நகர்மன்றத்தில் வலுவான எதிர்ப்பு தெரிவித்தது சிபிஎம். கோட்டக்குப்பம் நகரத்தின் அடிப்படை கோரிக்கைகளுக்காக தொடர்ந்து குரல்கொடுத்து போராடி வருகிறது. குறிப்பாக, கோவில் இடத்தில் நகராட்சி அலுவலகம் கட்டும் முயற்சியை எதிர்த்து வலு வான போராட்டத்தை முன்னெடுத் தது.

நகராட்சி அலுவலக கட்டிட விவகாரம்

நகராட்சியின் தற்போதைய கட்டி டம் எதிரில் உள்ள நகராட்சி சொந்த இடத்தில் புதிய அலுவலகம் கட்ட நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டிருந்தும், அதை புறக் கணித்து அய்யனார் கோவில் நிலத்தில் ரூ.4 கோடி மதிப்பில் கட்டிடம் கட்ட முயற்சி மேற்கொள் ளப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதியின்றி கோவில் நிலத்தை பயன்படுத்த முயற்சிப் பதை கட்சியின் நகரசெயலாளர் ஜா.முகமது அனஸ் கடுமையாக எதிர்த்தார். தொடரும் போராட்டப் பயணம் கோட்டக்குப்பம் மகளிர் காவல் நிலையத்தில் நடக்கும் முறைகேடு களை எதிர்த்தும், சமூக நல்லிணக் கத்தை வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வரு கின்றன. சிபிஎம் வார்டு உறுப்பின ரின் சாதனைகள் புத்தகமாக தொகுக்க ப்பட்டு, மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசனால் அவர்களால் வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாநாட்டை நோக்கி 2024 ஜனவரி 3, 4, 5 ஆகிய தேதி களில் விழுப்புரத்தில் நடைபெற வுள்ள சிபிஎம் மாநில மாநாட்டில் கோட்டக்குப்பம் நகரின் உழைக்கும் மக்கள்பெருமளவில் பங்கேற்க ஆயத்தமாகிவருகின்றனர். எளிய  மக்களின் உரிமைகளுக்காக அனு தினமும் போராடும் கட்சியின் பயணம் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க் கப்படுகிறது.