districts

img

தூய்மை பணியாளர்களுக்கு உடை மாற்றும் அறை

சென்னை. செப். 10- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்ட லம் 4இல் உடை மற்றும் அறை அமைத்துக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகே உள்ள மண்டல அலுவலகம் முன்பு செவ்வா யன்று (செப். 10) ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கோட்டம் 35, 39, 42, 46, 48 ஆகிய இடங்க ளில் கழிவறை கூடை மாற்றும் துறை ஏற்ப டுத்தி கொடுக்க வேண்டும், கோட்டம் 35, 36, 39, 45 ஆகிய இடங்களில் பிஓவி ஷெட் கோட்டம் அருகில் அமைத்துக் கொடுக்க வேண்டும், 2020-21 மற்றும் 2021 - 22ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட வேண்டிய தையல் கூலி, 2022-23 ஆண்டில் வழங்க வேண்டிய நலப் பொருட்களை உடனே வழங்க வேண்டும், கொடுங்கையூர் குப்பை  கொட்டும் வளாகத்தை முறையாக சீர்செய்து கொடுக்க வேண்டும், பல ஆண்டுகளாக பணிபுரியும் என்யூ எல்எம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் வேலையில் முன்னு ரிமை வழங்கி மாதம் முழுவதும் வேலை  வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் தலைவர் சி.திருவேட்டை, பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசலு, நிர்வாகிகள் ஜெ.பட் டாபி, ராஜன், முனுசாமி, ராஜேந்திரன், பென்சிலைய்யா, ரகு உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.