சென்னை. செப். 11- மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் பேசின் பாலம் அருகே உள்ள மண்டலம் 5 அலுவலகம் முன்பு புதனன்று (செப். 11) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘அண்டை வீடு’, என்யூஎல்எம் குழு திட்டத்தை ரத்து செய்து மாநகராட்சியே மாதம் முழுவதும் நேரடியாக வேலை வழங்க வேண்டும், முதல்வரின் தேர்தல் வாக்குறுதிபடி 10 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் என்எம்ஆர், என்யூஎல்எம், மலேரியா, துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், கோட்டம் 52, 55, 56, 59, 61, 62 ஆகிய இடங்களில் கழிவறை, உடை மாற்றும் அறை, (ஓய்வறை), குடிதண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், 2023 - 24 ஆண்டிற்கான நலப் பொருட்களை வழங்க வேண்டும், 2 ஆண்டுகளாக வழங்கப்படாத பிடித்தம் செய்த சிபிஎஸ் விவரத்தினை (Statement) வழங்க வேண்டும். கோட்டம் 59, 61 ஆகிய இடங்களில் பிஓவி ஆட்டோ நிறுத்த கோட்டத்தின் அருகிலேயே இடம் அமைத்து கொடுக்க வேண்டும், துப்புரவு பணிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. காவல்துறை அராஜகம் வடக்கு வட்டார அலுவலர் கட்டா ரவி தேஜா தலையீட்டின் பேரில் காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தின் இடை யிலேயே ஒலி பெருக்கியை அணைத்துள்ள னர். இதையடுத்து தொழிலாளர்கள் அலுவலரின் செயலை கண்டித்து அவரது அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் பொதுச்செயலாளர் பி.ஸ்ரீனிவாசலு, நிர்வாகிகள் ஜெ.பட்டாபி, டி.ராஜன், ஜி.முனுசாமி, சுந்தரம், ஜமுனா, செல்வமணி, வெங்கடேசன், வரதராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.