சுங்கத்துறை பணிகளுக்கான எழுத்து தேர்வில் ஆள் மாறாட்டம்
சென்னை, அக். 15- சுங்கத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், உணவக உதவியாளர், எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருமணி நேர தேர்வாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில், இதற்கான எழுத்து தேர்வு துவங்கிய 15 நிமிடத்தில், சுங்கத்துறை தேர்வு குழு அதிகாரிகளுக்கு ஏற்பட்ட லேசான சந்தேகத்தால், தேர்வர்களை சோதனை செய்ததில், அதிர வைக்கும் சம்பவமாக காதின் உள்புறமாக புளுடூத், உடலில் எலக்ட்ரானிக் டிவைஸ் போன்ற சாதனங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 29 பேர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மற்றொருவரையும் மொத்தம் 30 பேர் எலக்ட்ரானிக் சாதனங்களை உடலில் பொருத்தியபடி தேர்வு எழுதி உள்ளனர். இவர்களுக்கு சுங்கத்துறை அலுவலக வளாகத்தில் இருந்து, கேள்விக்கான பதிலை அளித்தவர்கள் என்பதை அறிய, சுங்கத்துறை சார்பில் வடக்கு கடற்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டு 29 பேரையும் போலீசில் ஒப்படைத்தனர்.
விமான பயணிகளிடம் தங்கம் பறிமுதல்
சென்னை, அக். 15- சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து பெரு மளவில் தங்கம் கடத்தி வரு வதாக சென்னை மண்டல மத்திய வருவாய் புல னாய்வு பிரிவு அதிகாரி களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. மலேசியாவில் இருந்து ஞாயிறன்று (அக். 15) சென்னை வந்த 2 வாலி பர்களை மடக்கி சோதனை செய்தனர். அவர்களது சீரு டைகளில் ரகசிய அறை கள் வைத்து தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதை யடுத்து அவர்களிடம் இருந்து ரூ. 1 கோடியே 73 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 970 கிராம் தங்கத்தை பறி முதல் செய்தனர். மேலும் 2 பேரையும் கைது செய்து, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திடீர் மாரடைப்பு: கலைஇயக்குநர் மரணம்
சென்னை, அக்.15 மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பிற்காக அங்கு சென்ற கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் ஞாயிறன்று காலை கால மானார். அவருக்கு வயது 54. மிலன், கலாப காதலன் படத்தில் கலை இயக்கு நராக அறிமுகமானார் மிலன் என்பது குறிப் பிடத்தக்கது.
சென்னை யானைக்கவுனி மேம்பாலம்
டிசம்பரில் திறக்கப்படும்: தெற்கு ரயில்வே
சென்னை, அக். 15- சென்னை யானைக்கவுனி மேம்பாலம் தற்போது முழுவதுமாக முடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வரும் நிலையில் 90 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் டிசம்பர் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெற்கு ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள யானைக்கவுனி மேம்பாலம் புரசைவாக்கம், வால்டாக்ஸ் ரோடு மற்றும் பெரியமேடு சென்ட்ரல் போன்ற பகுதிகளை இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் கடந்த 1935ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதனால் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இத னால் இந்த மேம்பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. அவ்வாறான சிரமத்தை கருத்தில் கொண்டு சென்னை மாநக ராட்சியும் தெற்கு ரயில்வேயும் இணைந்து கடந்த 2019ஆம் ஆண்டு இந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய மேம்பாலம் கட்டுப்பணிகள் தொடங்கப்பட்டது. ரூ.53 கோடி மதிப்பீட்டில் கட்டப் படும் இந்த பாலத்தின் இரண்டு புறமும் சாய்தள சாலை மாநகராட்சி சார்பில் அமைக்கப்படுகிறது. மேலும் ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் பிரமாண்ட தூண்கள் அமைக்கப்பட்டு கட்டுமான பணி தொடங்கி ஒரு ஆண்டிற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் தற்போது 4 ஆண்டுகளை கடந்தும் இந்த பாலம் கட்டு மானப் பணி முழுமை பெறவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பேசின் பிரிட்ஜ் பாலத்தை சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் இந்த பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரு கின்றனர். சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது தெற்கு ரயில்வே சார்பில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் மட்டுமே நடைபெறுகிறது. இந்த யானைக்கவுனி பாலமானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை விரைவில் அடையக்கூடிய முக்கிய பாலமாக இருப்பதினால் இந்த பாதையை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரத்தில் பில்டர் காபி நிலையம் அமைக்க அழைப்பு
விழுப்புரம்,அக்.15- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பில்டர் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்க லாம் என்று மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக பில்டர் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தொழிலை தொடங்க காலி இடம் அல்லது கட்டி டங்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். உரிமைக் கட்டணம் ரூ.2 லட்சம் முற்றிலும் விலக்களிக்கப்படும். இந்த நிலையத்தில் விற்பனை செய்வதற்கு வாங்கும் பொருட்களுக்கு 5 விழுக்காடு வரை சிறப்பு தள்ளுபடியும், பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும்.மேலும், மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்று களுடன் இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத் தொகை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்க ளுக்கு 30 விழுக்காடு அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்ச மும், பழங்குடியினருக்கு 50 விழுக்காடு அல்லது அதிகபட்ச மாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5 விழுக்காடு முதல் 10 விழுக்காடு சொந்த முதலீடு வங்கி யில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடன் உதவி பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
சிதம்பரம், அக்.15- காவிரி படுகை பாது காப்பு கூட்டு இயக்கம் மற்றும் சிதம்பரம் நகர அனைத்து கட்சிகளின் சார்பில் ஆலோசனை கூட்டம் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ராமச்சந்திரன் தலை மையில் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு, நகர மன்ற துணைத் தலை வர் முத்துக்குமரன், நகரச் செயலாளர் எஸ். ராஜா ஆகியோர் கலந்து கொண்டார். சேகர் (சிபிஐ), மக்கீன் (காங்கிரஸ்), குமரன் (தவாக), ஆதிமூலம் (விசிக),சித்தார்த்தன் (திக), தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் சரவணன், கற்பனை செல்வம், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் இளங்கீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு லோக்-அதாலத்: ரூ.187 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
சென்னை, அக்.15- தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற சிறப்பு லோக்-அதாலத்தில், ரூ. 186.73 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. தமிழ்நாட்டில் குடும்பப் பிரச்சினைகள் தொடர்பான நிலுவை வழக்குகளுக்கான சிறப்பு லோக்-அதாலத் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. இதில், அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் நேரிட்ட விபத்து வழக்குகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.பரத சக்கரவர்த்தி, பி.தனபால், சி.குமரப்பன் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் ஆகியோரின் தலைமையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி ஆகியோர் தலைமையில் அமர்வுகள் அமைக்கப்பட்டு, நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதேபோல், மாநிலம் முழுவதும் 194 அமர்வுகளில் மொத்தம் 8 ஆயிரத்து 92 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு ரூ.186.73 கோடி இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்-செயலர், மாவட்ட நீதிபதியுமான ஏ.நசீர் அகமது, உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், மாவட்ட நீதிபதியுமான கே.சுதா ஆகியோர் செய்திருந்தனர்.
பள்ளிகளுக்கு அருகே குட்கா: காவல்துறை எச்சரிக்கை
சென்னை,அக்.15- தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த சோதனையில் 950 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 971 நபர்கள் கைது செய்யப் பட்டனர். சென்னையில் பல இடங்களில் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை யில் சிறப்பு சோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனால் பள்ளி கள் மற்றும் கல்லூரிகள் அருகே உள்ள கடைகளில் குட்கா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.