districts

ரூ.150 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

அம்பத்தூர், பிப்.11- அம்பத்தூர் திருமுல்லை வாயலில் ஆக்கிரமிக்கப் பட்ட ரூ.150 கோடி மதிப்பி லான அரசு நிலத்தை வரு வாய்த்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை மீட்டனர்.  திருமுல்லைவாயல், சிடிஹெச் சாலையை ஒட்டி 1.68 ஏக்கர் பரப்பளவில் கணக்கன்குட்டை என்ற நீர்நிலை புறம்போக்கு இருந்துள்ளது. இதனை பல ஆண்டுகளாக இரும்புக்  கடை, மரம் அறுக்கும் நிலை யம், பட்டறை உள்ளிட்ட 11 தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து அனுபவித்து வந்தனர்.  இந்த நிலம் தொடர் பான வழக்கு உயர் நீதி மன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த மாதம் நீர் நிலையை ஆக்கிரமித்த தனியார் நிறுவனங்களை அகற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு நீதி மன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதீப், ஆவடி மாநகராட்சி ஆணை யர் எஸ்.கந்தசாமி ஆகி யோர் நீர்நிலை புறம் போக்கு இடத்தில் உள்ள கட்டடங்களை அகற்ற ஆவடி வருவாய் துறையினருக்கு உத்தர விட்டனர். இந்த நிலையில் திங்கள்கிழமை ஆவடி வட்டாட்சியர் எஸ்.உதயம் தலைமையில் வருவாய் மற்றும் மாநகராட்சி ஊழி யர்கள் சம்பவ இட த்திற்கு பொக்லைன் இயந்தி ரங்களுடன் வந்தனர். நீர் நிலையை ஆக்கிரமித்து இருந்த கட்டடங்களை 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பொக்லைன் மூலம் இடித்து அகற்றும் பணியில்  ஈடுபட்டனர். இதற்கு திரு முல்லைவாயல் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் தலைமையில் 60க்கும் மேற்பட்ட போலீ ஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை முதல் இரவு வரை ஆக்கிர மிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.  இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறி யது, கணக்கன்குட்டை நீர்நிலை புறம்போக்கில் இருந்த அனைத்து கட்டடங் களும் இடித்து அகற்றப் பட்டன. இந்த நிலத்திற்குள் இனிமேல் யாரும் அத்து மீறி நுழைய கூடாது. மீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மீட்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.150 கோடி என்றனர்.