districts

img

ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

திருவண்ணாமலை, ஆக.4-

   திருவண்ணாமலை மாவட்டம்,செங்கம் வட்டம், மோட்டூர் கிராமத்தை சேர்ந்த தண்டபாணியின் செல்போனுக்கு ஐசிஐசிஐ  வங்கியின் வாடிக்கையாளர் சேவை பிரிவில் இருந்து பேசுவதாக அழைப்பு வந்துள்ளது.  

   எதிர் தரப்பில் இருந்து பேசியவர், தங்கள் வங்கிக் கணக்கில் கே.ஒய்.சி  புதுப்பிக்க வேண்டும் என்றும் வங்கிக் கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் கேட்டுள் ளார். தண்டபாணியும் முழுமையாக கூறியதை முழுமையாக பதிவு செய்த வுடன் அவருடைய வங்கி  கணக்கிலிருந்த பணம்  ரூ.66,000 எடுத்துக்கொண் டார்.

    பிறகு,தான் அவர் போலி யான நபர்களிடம் பணத்தை இழந்ததை தெரியவந்தது. இழந்த பணத்தை மீட்டு  கொடுக்குமாறு உடனடி யாக சைபர் கிரைம் பண மோசடி பிரிவில் புகார் செய்திருக்கிறார்.

    அதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அறிவுறுத் தலின்படி, சைபர் கிரைம்  கூடுதல் காவல் கண்காணிப் பாளர் பழனி  தலைமை யிலான காவல்துறையினர் உரிய விசாரணை செய்து துரிதமாக செயல்பட்டு இழந்த பணத்தை மீட்டனர்.

    பிறகு,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவ லகத்தில் தண்டபாணியை வரவழைத்து மீட்கப்பட்ட பணம் ரூ.66 ஆயிரத்து ஒப்படைத்தனர்.