districts

சென்னை முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு  ஏடிஎம் அட்டை வழங்க வேண்டும்  ராயபுரம் மாநாடு வலியுறுத்தல் 

சென்னை, ஆக. 12- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ராயபுரம் பகுதி முதல் மாநாடு என்.ராஜேஷ் தலைமை யில் ஞாயிறன்று (ஆக.12) நடைபெற்றது. எஸ்.பாப்பு அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.  மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயராமன் மாநாட்டை  துவக்கி வைத்து பேசினார். துணைச் செயலாளர் தில்சாத் பேகம், எஸ்.பவானி, டி.வெங்கட் (சிஐடியு) ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பொருளாளர் ஆர்.நடராஜன் மாநாட்டை  நிறைவு செய்து பேசினார். முன்னதாக எம்.மணிமாறன் வரவேற்றார். எம்.அண்ணாமலை நன்றி கூறினார். தீர்மானங்கள் விண்ணப்பிக்கும் அனைத்து மாற்றுத்திறனாளி களுக்கும் உடனடியாக உதவி தொகை வழங்க வேண்டும்,   பகுதி வாரியாக  மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர சிறப்பு  கூட்டங்கள் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தலைவராக எம்.அண்ணாமலை, செயலாளராக  முகமது மதீன் உசைன், பொருளாளராக எம்.மணிமாறன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் வழங்க கோரிக்கை

திருவள்ளூர், ஆக. 12- மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சோழவரம் - செங்குன்றம் பகுதி முதல் மாநாடு வலியுறுத்தியுள்ளது. தீர்த்தக்கிரியம்பட்டியில் ஞாயிறன்று (ஆக 11), ஏ.வி.புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டை  மாவட்ட பொறுப்பாளர் என்.கீதா துவக்கி வைத்தார். தீர்த்தக் கிரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதாடேவிட்சன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், பகுதி பொறுப்பாளர் பி.நடேசன், ஆட்டோ சங்கத்தின் மாவட்ட  செயலாளர் எம்.சந்திரசேகரன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசி னர். மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடை அமைப்பின் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன் நிறைவுரையாற்றினார். பகுதி தலைவராக ஏ.வி.புருஷோத்தமன், செயலாளராக  எஸ்.பார்த்திபன், பொருளாளராக சுமலதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் விண்ணப்பித்து காத்திருக்கும் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வழங்க வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தில் பணி நேரத்தை 4 மணி நேரமாக குறைக்க வேண்டும், ஏடிஎம் அட்டை வழங்க வேண்டும், சுய தொழில் செய்ய வங்கி கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு எலக்ட்ரிக்கல் தொழிலாளர் சங்க கிளை உதயம்

சென்னை, ஆக. 12- வடசென்னை மாவட்டம், மாதவரம் விநாயகபுரம் சூரப்பட்டு பிரதான சாலையில் தமிழ்நாடு எலக்ட்ரிகல் தொழி லாளர் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா வி.சரவணன்  தலைமையில் ஞாயிறன்று (ஆக. 11) நடைபெற்றது. சங்க கொடியை எம்.வேணு ஏற்றி வைத்தார். பெயர் பலகையை வி.கமலநாதன் திறந்து வைத்தார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் கலந்து கொண்டு உறுப்பினர் அட்டையை வழங்கி சிறப்புரை யாற்றினார். மாநில இணைச் செயலாளர் பி.அறிவரசு, மாநில பொருளாளர் டி.கே.சம்பத் ராவ், எஸ்.ராஜேஷ், பி.சீனிவாசன், ஆர்.ரவிக்குமார் (சிஐடியு) பி.லூர்துசாமி (கட்டுமானம்) ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தீர்மானம் தனி நலவாரியம் அமைக்க வேண்டும், மின் இணைப்பு  வழங்க மின் ஆய்வு உரிமம் பெற்றவர்களின் சான்றிதழை வாரிய ஆவணமாக்க வேண்டும், விபத்து மரணத்திற்கு ரூ.5  லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. தலைவராக எம்.வேணு, செயலாளராக வி.சரவணன், பொருளாளராக எல்.சீனிவாசன்உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை

சென்னை, ஆக.12- சென்னை பெருநகர கட்டுமான சங்கத்தின் ராயபுரம் பகுதி 7ஆம் ஆண்டு பேரவை கூட்டம் பகுதி தலைவர் வி.ஹரிஷ் தலைமையில் என்.எஸ்.ருக்மணி அம்மாள் நினைவகத்தில் ஞயிற்றுக்கிழமை (ஆக. 11) நடைபெற்றது. அஞ்சலி தீர்மானத்தை எல். கோவிந்தசாமி வாசித்தார். மாவட்ட துணை தலைவர் ஏ.தமீம் பேரவையை துவக்கி  வைத்தார். பகுதிச் செயலாளர் பி.செல்வம் வேலை அறிக்கை யையும், பொருளாளர் பெ.மணிகண்டன் வரவு செலவு  அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிஐடியு ஒருங்கிணைப் பாளர் டி. வெங்கட், சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ். பவானி ஆகியோர் வாழ்த்திப் பேசினார். மாவட்டச் செயலாளர்  லூர்துசாமி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக துணைத் தலைவர் கே. சரவணன் வரவேற்றார். பகுதிக் குழு உறுப்பினர் எம். மாரிமுத்து நன்றி  கூறினார். பேரவையில்  வயநாடு பேரிடர் நிதி ரூ5,110 மாவட்ட செயலாளரிடம் வழங்கப்பட்டது. தீர்மானங்கள் பெண்களுக்கு 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும், பென்ஷன் தொகையை ரூ.3ஆயிரம் உயர்த்தி  வழங்க வேண்டும், கேட்பு மனுக்களுக்கு 15 நாட்களுக்குள்  ஒப்புதல் வழங்கி பணப்பலன்களை வழங்க வேண்டும், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தலைவராக வி.ஹரிஷ் , செயலாளராக  பி.செல்வம், பொருளாளராக  பெ.மணிகண்டன்  உள்ளிட்ட 9 பேர் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.

தண்டையார்பேட்டையில் நிறுத்தப்பட்ட  முதியோர் உதவித்தொகையை விரைந்து வழங்க சிபிஎம் கோரிக்கை 

சென்னை, ஆக. 12- தண்டையார்பேட்டை பகுதியில் வழங்கப்படாமல் உள்ள முதியோர் உதவித் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு மாதந் தோறும் உதவித் தொகை  வழங்குகிறது. இந்நிலையில் தண்டையார்பேட்டைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள வட்டாட்சியர் இந்த மாதம் வழங்க வேண்டிய உதவித்தொகையை வங்கிக்  கணக்கில் வரவு வைக்கா மல் காலம் தாழ்த்தி வரு கிறார். சென்னையின் இதர பகுதிகள் அனைத்திலும் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில், தண்டையார்பேட்டை பகுதி யில் இன்னும் வழங்காததால் முதியோர்கள் வேதனை யடைந்துள்ளனர். எனவே முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.லோகநாதன் வலியுறுத்தியுள்ளார்.

திருத்தணி நகராட்சியில் புதிய நூலகம் திறப்பு 

திருத்தணி,ஆக.12- தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் திங்களன்று (ஆக.12) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக  திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.2.06  கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள புதிய நூலகம் மற்றும் அறிவுச்சார் மையத் தினை திறந்து வைத்தார்.  கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி  கலந்து கொண்டு அறிவுச்சார் மையத்தினை பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர். அரக்கோணம் மக்க ளவை உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் மாவட்ட வரு வாய் அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

புதுச்சேரியில் மருத்துவ காப்பீட்டுத்திட்டம் 
முதலமைச்சர்  ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி, ஆக. 12- ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் திட்டத்திற்கு மாற்றாக அனைத்து  குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி பேரவையில் அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்களன்று நடைபெற்ற கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது பேசுகையில், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா, புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை எந்த மருத்துவ மனைகளிலும் ஏற்றுக்கொள்வ தில்லை என்றும், குறிப்பாக ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் கூட ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டை ஏற்றுக் கொள்வதில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும் இதனால் ஏழை எளிய மக்கள் அவசர சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்படுவதாக தெரி வித்தார். மேலும் இதுநாள் வரை இத்திட்டத்திற்கு ரூ.11கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.இத்தொகையை நோயாளிகளிடமே நேரில் வழங்கி இருந்தால் பல பேரின் உயிரை காப்பாற்றி இருக்க முடியும் என்று பேசினார். இதற்கு பதிலளித்து பேசிய முதல மைச்சர் ரங்கசாமி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை புதுச்சேரியில் சரியான முறை யில் அமல்படுத்த முடியவில்லை. இந்த திட்டத்திற்கு அரசு சார்பில் ரூ.8 கோடி  கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 3 கோடி புதுச்சேரி அரசின் பங்களிப்பு. 60:40 என்ற விகிதத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மஞ்சள் அட்டை உள்ளிட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வரு டத்திற்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் மனுக்கள் கணினியில் பதிவேற்றம்

கள்ளக்குறிச்சி, ஆக. 12 - மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா குறைகள், நில அளவை,பட்டா மாறுதல்,இலவச வீட்டு மனைபட்டா,முதியோர் உதவித்தொகை வழங்கல் உள்ளிட்ட , பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 536 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 18 மனுக்களும்  என மொத்தம் 554 பெறப்பட்டு,விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பொதுமக்கள் கொண்டு வரும் மனுக்களை வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.