districts

ரேசன் கார்டுகள் இனி வீடு தேடி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை, ஏப். 6- புதிய ரேசன் கார்டுகளை  வீடுகளுக்கு கொண்டு வந்து தரும் திட்டத்தை சென்னை யில் இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வியாழனன்று (ஏப். 6) தொடங்கிவைத்தார். குடும்ப அட்டைகள் காணாமல் போனாலோ அல்லது அதில் திருத்தம் ஏற்படுத்த வேண்டும் என்றால் அது தொடர் பாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து புதிய அட்டையை பெறும் முறை 2020இல் இருந்து நடைமுறையில் உள்ளது. புதிய அட்டை பெற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தினாலும், வாடிக் கையாளர்கள் அதை பெறுவதற்கு வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டி இருந்தது. இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு இதை எளிமைப் படுத்தும் வகையில், இணையம் மூலம் விண்ணப்பிக்கும் புதிய அட்டைகளை வீட்டிற்கே தபால் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி திட்டத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. விழா வில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் பயனாளர்களுக்கு இதை தொடங்கி வைத்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மாநிலம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய ரேஷன் கடை பணி யாளர்களின் பணியை பாராட்டி அவர் களை ஊக்குவிக்கும் விதமாக அவர்க ளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் நற்சான்றி தழை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி னார். இனி காணாமல் போன குடும்ப அட்டையில், திருத்தங்கள் மேற்கொள்ளப் பட வேண்டிய குடும்ப அட்டைகள் ஆகிய வற்றுக்கு பதிலாக புதிய அட்டைகளை www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்திற்கான கட்டணம் ரூ.20 மற்றும் தபால் சேவை கட்டணம் ரூ.25 ஆக  மொத்தம் ரூ.45 இணைய வழியில் செலுத்தி  புதிய அட்டையை தபால் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.