புதுச்சேரி காட்டேரிக்குப்பத்தில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளான ராசாங்குளம், அமட்டங்குளம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளபுயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியர் வல்லவன், மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றித்தரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.