ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில் திங்களன்று (ஆக. 12) போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. கிரண் ஸ்ருதி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.