ராணிப்பேட்டை, அக். 28 – ராணிப்பேட்டை மாவட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் வாலாஜா தாலுகா குழு உறுப்பினரும், வாலாஜா நகர செயலாளருமான மூத்த தோழர் எம். ஜோதி உடல் நலக்குறை வால் சனிக்கிழமையன்று(அக். 26) காலமானார். அவரது இறுதி நிகழ்வில் வாலாஜா தாலுகா குழு செயலாளர் ஆர். மணி கண்டன், மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர்கள் பி.ரகுபதி, டி. சந்திரன், எல்.சி.மணி, தா.வெங்கடேசன், என். ரமேஷ், தாலுகா குழு உறுப்பினர்கள் குணசேகரன், சேகர், செந்தில்குமார், ரேணு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் வில்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மறைந்த தோழர் ஜோதியின் துளசி மகன் சங்கர் மகள்கள் லட்சுமி, கமலம் ஆகியோரும் வாலாஜா தாலுகா குழு சார்பில் குடும்ப நிதியாக ரூ. 10 ஆயிரம் வழங்கினர்.