புதுச்சேரி,நவ.1- புதுச்சேரியில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதல மைச்சர் என்.ரங்காசமி கூறியுள்ளார். புதுச்சேரி விடுதலை நாள் விழா கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் வெள்ளிக்கிழமை கொண்டாடப் பட்டது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி யூனியன் பிரதேசம் 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி விடுதலை பெற்றுது. இந்தியாவுடன் 7 ஆண்டு களுக்கு பிறகு இணைந்தது. புதுச்சேரி விடுதலை நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் தேசிய கொடியை ஏற்றி வைத்து விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை எதிரே வெள்ளிக்கிழமை நடைபெற்ற விடுதலை நாள் விழா வில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல்துறையினர் மற்றும் முன்னாள் ரானுவத்தினர், மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை பார்வை யிட்டார். பின்னர் கலைஞர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.
முன்னோடி மாநிலம்
முன்னதாக முதல்வர் ரங்கசாமி விடு தலைநாள் விழாவில் உரையாற்று கையில்,புதுச்சேரி மாநிலத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் அனைத்தும் உடனடியாக பயனாளி களை சென்றடைகின்றன. அந்த வகை யில் புதுச்சேரி மாநிலம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது என்று பெருமிதத்துடன் தெரி வித்தார். மேலும் புதுச்சேரி அரசின் 16 துறை கள் மூலம் செயல்படுத்தப்படும் 142 நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு நேரடி பயன் பரிமாற்றத்திற்கு அவர வர் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். அரசு பொறுப்பேற்ற திலிருந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி மேம்பாட்டுக்காக 124.76 கோடி அள விற்கு நிதி உதவி வழங்கப்பட்டது குறிப்பிட்ட முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசின் 100 விழுக்காடு நிதி உதவியுடன் புதுச்சேரி மீன்பிடி துறை முகத்தை மேம்படுத்தும் பணிகள் 15.63 கோடி ரூபாய் செலவில் நடை பெற்று வருகிறது. இந்த பணி விரை வில் முடிக்கப்பட்டு மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார். புதுச்சேரியில் உள்ள இளைஞர்க ளுக்கு அரசு வேலை வாய்ப்பை உரு வாக்கும் வகையில் அனைத்து துறை களில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். புதுச்சேரி ஒரு அமைதியான மாநிலம் என்பதை நிலை நிறுத்தும் வகையில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது குற்றங்கள் நடைபெறுவது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதன் விளைவாக சாலை விபத்துகளும் பெருமளவில் குறைந்துள்ளது என்றார். உலக அளவில் உள்ள சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வந்து செல்வ தால் உலக அளவில் விரும்பப்படும் சுற்றுலா நகரமாக புதுச்சேரி உரு வெடுத்துள்ளது. அண்மையில் ஆஸ்தி ரேலியா சேர்ந்த ஒரு நிறுவனம் வெளி யிட்டுள்ள உலக சுற்றுலா பயண பட்டிய லில் வரும் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த பயண இடங்களில் புதுச்சேரி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது என்று தெரிவித்தார். விழாவில் அமைச்சர்கள் நமச்சிவா யம், லட்சுமிநாராயணன்,ஜெயக் குமார், சாய்சரவணன் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள்,தலைமை செயலர் சரத்சௌவுகான், அரசு செய லர்கள் மற்றும் துறைஅதிகாரிகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசு கள் உட்பட திரளானோர் விழா வில் கலந்து கொண்டனர். இதே போல் காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிரதேசங்களில் புதுச்சேரி விடுதலை நாள் தேசிய கொடி ஏற்றி கொண்டப்பட்டது.