பழனி, நவ. 4- பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மின்சார வாகனத்தை ஒன்றை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் நன்கொடையாக வழங்கியது. ஞாயிறு (நவ.3) மாலை பழனி அடிவாரத்தில் உள்ள பால விநாயகர் கோவில் அருகில் நடை பெற்ற இவ்விழாவில் மின்சார வாகனத்திற்கான சாவியை ராம்ராஜ் காட்டன் நிறுவனர்-தலைவர் கே. ஆர். நாகராஜன், பழனி திருக்கோவில் இணை ஆணையர் மாரிமுத்துவிடம் வழங்கினார். பக்தர்க ளின் வசதிக்காக ராம் ராஜ் காட்டன் மின்சார வாகனத்தை வழங்கி யமைக்காக இணை ஆணையர் நன்றி தெரி வித்தார். இந்த நிகழ்ச்சியின் போது சுமதி நாகராஜன் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகி யோர் உடன் இருந்தனர்.