பாவேந்தர் பாரதிதாசனின் 133ஆவது பிறந்த நாளையொட்டி புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியிலுள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் பெருமாள், மாநிலக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சரவணன், உழவர்கரை நகரச் செயலாளர் ராம்ஜி உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.