புதுச்சேரியில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மூன்று பத்திரிக்கையாளர்கள் ரமேஷ் (மாலைத் தமிழகம்), பரத் (பாலிமர் தொலைக்காட்சி), வெங்கடேஷ் (தினமலர்) ஆகியோரது குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ. 10 லட்சம் நிதியை வெள்ளியன்று (செப்.8) சட்டப்பேரவையில் குடும்பத்தினரிடம் முதல்வர் ரங்கசாமி வழங்கினார். உடன் பேரவை தலைவர் செல்வம், ஆட்சியர் வல்லவன், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் தமிழ்ச்செல்வன், ஒருங்கிணைந்த பத்திரிகையாளர் சங்க செயலாளர் தயாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.