சென்னை,மே 17-
சென்னை ராஜீவ்காந்தி அரசினர் மருத்துவமனை, முடநீக்கியல் துறையில் உரிய மருந்து இருப்பு இல்லாததால் நோயாளி அவதிபடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா விடுத்துள்ள அறிக்கை வரு மாறு
செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த சி.செல்வமணி (வயது-42) நடக்க இயலாமல் மருத்துவ சிகிச்சைகக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசினர் மருத்துவ மனை, முடநீக்கியல் துறையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அளிக்கப்பட்ட உரிய, தரமான சிகிச்சையின் காரணமாக எழுந்து நடமாடக் கூடிய அளவிற்கு உடல்நிலை யில் முன்னேற்றம் அடைந்தார். தொடர் சிகிச்சைக்காக வாரம் ஒருமுறை என ஐந்து வாரத்திற்கு ளுநுஊருமுஐசூருஆஹக்ஷ - 150 அப மருந்தை ஊசி மூலமாக தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதன்படி ஏப். 6ஆம் தேதி, ஏப். 10ஆம் தேதி என இரண்டு வாரங்கள் தொடர்ந்து மேற்கண்ட மருந்து நோயாளிக்கு செலுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்த தவணையில் மருந்து செலுத்துவதற்காக ஏப். 18, ஏப். 21, மே 2 ஆகிய தேதிகளில் மருத்துவமனைக்கு சென்ற போது, உரிய மருந்து இல்லாததால் நோயாளிக்கு ஊசி போடவில்லை. அடுத்தடுத்த தவணைகளில் கட்டாயமாக செலுத்த வேண்டிய மருந்து கிடைக்காததால், நோயாளி உடல்ரீதியாக பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளார். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த 8 ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது.
இதன் பிறகும், ஊசி போடுவதற்காக மருத்துவமனைக்கு மே 9 ஆம்தேதி சென்ற செல்வமணியை இரண்டு நாட்கள் மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்க வைத்து, மருந்து இல்லை என்ற காரணத்தை மீண்டும் வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.
மருந்து பற்றாக்குறை காரணமாக நோயாளிகளுக்கு குறிப்பிட்ட கால இடை வெளியில் மருந்து செலுத்தாதது ஏற்கத்தக்க நடைமுறையல்ல. உடனடியாக அரசு மருத்துவமனைகளிலும் தேவைப்படும் மருந்துகள் கையிருப்பு இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும். நோயாளி செல்வமணிக்கு உடனடியாக மருந்து கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் செல்வா கூறியுள்ளார்.