districts

img

ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்சே கைது!

கொழும்பு, ஜன.25- இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே-வின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்சே, ஊழல் குற்  றச்சாட்டின் பேரில் அந்நாட்டு போலீசா ரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கடற்படை அதிகாரியான யோஷிதா ராஜபக்சே, தனது தந்தை ஜனா திபதியாக இருந்த போது 2015-ஆம் ஆண்டுக்கு முன்பு சொத்து ஒன்றை வாங்கும்போது முறைகேட்டில் ஈடுபட்ட தாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. கதிர்காமம் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கியிருந்த கோத்தப்பய ராஜ பக்சேவிடம் இந்த வழக்கின் கீழ் போலீசார் விசாரணையும் மேற்கொண்டனர். இந்நிலையில் தான், யோஷித ராஜபக்சே, பெலியாட்டா பகுதியில் உள்ள அவரது வீட்டில் இலங்கை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2005-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை மகிந்த ராஜபக்சேவின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தவறான நடவடிக்கைகளுக்கு காரணமான ஒவ்வொருவரும் கைது செய்யப்படுவார் என்று ஜனாதிபதி தேர்தலின் போதே அனுரகுமார திஸா நாயக்க வாக்குறுதி அளித்தார். அதன்படியே, இலங்கையின் முதல்  இடதுசாரி ஜனாதிபதியாக தேர்ந்தெ டுக்கப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க, கடந்த நவம்பரில் ஆட்சிக்கு வந்த உடன்,  இதேபோன்றதொரு சொத்து விவகார வழக்கில் மகிந்த ராஜபக்சேவின் மூத்த  மகனும் எம்.பி.யுமான நமல் ராஜபக்சே விடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். மகிந்த ராஜபக்சேவிடம் பணியாற்றும் ஒருவரிடமும் இதே வழக்கில் போலீசார் விசாரணை செய்தனர். அடுத்ததாக, மகிந்த ராஜபக்சேவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இதற்கு எதிராக, உச்ச நீதிமன்றம் சென்ற மகிந்த ராஜபக்சே, தமது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை, கடந்த மாதம் குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் அவர்களை பாதுகாப்பு பணிக்கு நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று கூப்பாடு வைத்திருந்தார். இந்த சூழலில்தான் ராஜபக்சேவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.