districts

img

வட சென்னையில் பல இடங்களில் தேங்கிய மழை நீர்

சென்னை, அக். 16- வட சென்னையில் சில பகுதி களில் தேங்கியுள்ள மழை நீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.  வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் மற்றும் பருவ மழை தொடங்கியதன்  காரணமாக திங்கட்கிழமை இரவு தொடங்கிய மழை செவ்வாயன்று இரவு வரை தொடர்ந்தது. இதனால் வட சென்னைக்குட்பட்ட பல பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மாநக ராட்சி சார்பில் மோட்டர் மூலம் தண்ணீர் வெளியேற்ற நட வடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில்  புதனன்று மழை குறையத் திடங்கியது. இதனால் பல பகுதிகளில் தேங்கிய மழை நீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டது. ஆனாலும் திருவொற்றியூர் தொகுதியில் ஆதிதிராவிடர் காலனி, மேட்டுத் தெரு, வி.பி. நகர், ஜோதி நகர், ஆர்.கே. நகர் தொகுதியில் அன்னை சத்யா நகர், மாதவரம் ரெட்டேரி லட்சுமி அம்மன் நகர், பெரம்பூர் தொகுதி யில் வியாசர்பாடி, திருவிக நகர் தொகுதியில் பட்டாளம் உள்ளிட்ட சில பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.  திருவொற்றியூர் 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் முயற்சியில் அசோக் லேலண்ட் நிறுவன உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களக்கு உணவு ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது. திருவிக நகர் பட்டாளம் பகுதியில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் படகு மூலம் மக்கள் மீட்கப்பட்டு பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். ஆர்.கே. நகர் 41ஆவது வார்டில் மாமன்ற உறுப்பினர் பா.விமலா தொடர் முயற்சியால் எழில் நகர், நேரு நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் தேங்கிய மழைநீர் விரைந்து வெளி யேற்றப்பட்டது. அதேபோல் மக்க ளவை உறுப்பினர்,  சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பி னர்கள், மாநகராட்சி அதிகாரிகள், தூய்மை பணியார்களின் தொடர் முயற்ச்சியால் தேங்கிய பகுதிகளில் உள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.