districts

சென்னை முக்கிய செய்திகள்

மழை: சேதமான சோபா, மெத்தை வீட்டிற்கே வந்து சேகரிக்கப்படும்

 சென்னை, டிச. 18- மிக்ஜம் புயல் காரணமாக பெய்த பலத்த மழை காரணமாக  சென்னை வெள்ளத்தில் மிதந்தது. இதனால் தரைதளத்தில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பல வீடுகளில் 6 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது. வீடுகளில் மழைநீரால் சேதம் அடைந்த சோபாக்கள், மெத்தை உள்ளிட்ட பொருட்களை குப்பை தொட்டி அல்லது தெருக்களில் வீசி போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம். கட்டணம் இல்லாத தொலை பேசி எண்ணான 18005712069 என்ற எண்ணில் அழைத்தால் உங்கள் வீட்டுக்கே வந்து குப்பை கழிவுகளை சேகரித்து செல்வார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது

அம்பத்தூர், டிச. 18- ஆவடி சிடிஎச் சாலை யில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 15) வழக்கம் போல் பணி  முடிந்து வங்கியை அதிகாரி கள் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர்.  சனிக்கிழமை (டிச. 16)  வங்கியை திறக்க வந்த அதி காரிகள், வங்கியின் முன்  பகுதி இரும்பு கதவில்  இருந்த 3 பூட்டுகளில் 2 பூட்டுகள் உடைக்கப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வங்கியின் துணை மேலாளர் ஜனா ஆவடி காவல் நிலை யத்தில் புகார் அளித்தார்.  அந்த பகுதியில் இருந்த  கண்காணிப்பு கேமராக் களை ஆய்வு செய்த போது,  மர்ம நபர்வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை  முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்நிலையில் பட்டா பிராம் இந்து கல்லூரி ரயில்  நிலையம் அருகே சந்தே கத்திற்கிடமாக சென்ற நபரை பிடித்து விசாரணை  நடத்தினர்.  விசாரணையில் அவர் மகாராஷ்டிரா மாநிலம், மும்பை பகுதி யைச் சேர்ந்த சொட்டு ராஜ் (46) என்பதும், இவர் வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை யினர் அவரை கைது செய்து,  பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறை யில் அடைத்தனர்.

25 கிராம ஊராட்சிகளும் விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும்: அமைச்சர்

கள்ளக்குறிச்சி, டிச.18-  திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 25 கிராம ஊராட்சிகளும் விழுப்புரம் மாவட்டத்திலேயே தொடரும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது பேரங்கியூர், கரடிப்பாக்கம், இருவேல்பட்டு, பொய்கை அசூர், டி குமாரமங்கலம், ஆனத்தூர், சேமங்கலம், அரசூர், ஆலங்குப்பம், தென்மங்கலம், கண்ணாரம்பட்டு, காந்தலவாடி, கருவேப்பிலைபாளையம், சித்தானங்கூர், கீரிமேடு, ஆனைவாரி, அரும்பட்டு, மாதம்பட்டு, சரவணம் பாக்கம், பெரியசெவலை, ஆமூர், டி.கொளத்தூர். இந்த 25 கிராம ஊராட்சிகளையும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கும் முயற்சி நடைபெற்றது. அதி காரிகள் இந்த முயற்சியை கைவிட வேண்டும், திரு நாவலூர் ஒன்றியத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் விழுப்புரம் மாவட்ட அரசியல் கட்சித் தலை வர்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்தன.  இந்நிலையில் டிச.17 அன்று அரசூருக்கு வருகை தந்த உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, விழுப்புரம் ஆட்சியர் பழனி, சட்டமன்ற உறுப்பினர் மணி கண்ணன் ஆகியோர் 25 கிராம ஊராட்சிகளை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைப்படும் என்றும் திருநாவலூர் பகுதி கள் தொகுதி வரையறையின் போது திருநாவலூர் தனி வட்டமாக அறிவித்து விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கப் படும் என்றும் கூறினர்.

அரசூரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், குடியிருப்பு திறப்பு

விழுப்புரம்,டிச.18- விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியம், அரசூரில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தை உயர்கல்வித்துறை அமைச்சர்  க.பொன்முடி திங்களன்று (டிச.18) திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, மணி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஓம். சிவசக்திவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சந்திரசேகர்,  விஸ்வநாதன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூரில் ஓய்வூதியர் சங்கங்களின் அமைப்பு கூட்டம்

திருப்பத்தூர். டிச 17 - ஒன்றிய-மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் திருப்பத்தூர் மாவட்ட முதல் அமைப்புக் கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜி.ரவி வரவேற்றார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாவட்டத் தலைவர் எஸ்.ராசு, அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க மாநில உதவி பொதுச் செயலாளர் செஞ்சி மணி, எம்.காசி தட்சிண ரயில்வே ஓய்வூதியர் சங்கம் சிஐடியு அமைப்பாளர் சி.கேசவன், ஆயுள் காப்பீட்டு கழக ஓய்வூதியர் சங்கம் செல்வம் வாழ்த்திப் பேசினர்.தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் டி.குப்பன் உரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் ஏ.ரங்கன்  நன்றி கூறினார்.