districts

சோத்துப்பாக்கம் உட்பட 3 இடங்களில் ரூ 97.4 கோடியில் ரயில்வே மேம்பாலம்

செங்கல்பட்டு, பிப்.26-  சோத்துப்பாக்கம், மறைமலை நகர், செட்டிபுண்ணியம் ஆகிய மூன்று இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரயில்வே மேம்பாலம் கட்டப் படுகிறது. இதற்காக பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.  மறைமலைநகர், மகேந்திரா வேர்ல்டு சிட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். தொழிற் சாலைகளுக்கு சரக்கு வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் ஏராளமாக சென்று வருகின்றன.  மறைமலைநகர், செட்டிப்புண்ணி யம் ஆகிய பகுதியில், ரயில்வே கேட் உள்ளது. இங்குள்ள, ரயில் பாதை வழி யாக, சென்னையிலிருந்து இயக்கப் படும் மின்சார ரயில்கள், தென்மாவட் டங்களுக்கான விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் செல்கின்றன. இந்த ரயில்கள் செல்லும் நேரங்க ளில் ரயில்வே கேட் மூடப்படுவதால், வாகனங்கள் சென்னை  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிற்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதேபோன்று செய்யூர் சாலை அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் ரயில்வே கேட் உள்ளது.  இந்த கேட் அடிக்கடி மூடப்படு வதால் மேல்மருவத்தூர் செய்யூர், கிழக்கு கடற்கரை செல்லும் வாகனங் கள் கடுமையாக பாதிக்கப்படு கின்றனர். விடுமுறை நாட்களில், இந்த  இடங்களை கடக்க நீண்ட நேரம் காத்தி ருக்கும் வாகன ஓட்டிகள், கேட் திறக்கப் படும்போது முந்திக் கொண்டு செல்வ தால், அடிக்கடி விபத்துகள் ஏற்படு கின்றன.  இதை தவிர்க்க, ரயில்வே நிர்வாகம் மற்றும் தமிழக அரசும் இணைந்து மேம்பாலம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் சோத்துப் பாக்கத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுமக்களி டம் கையெழுத்து இயக்கம் நடத்தப் பட்டது, பிறகு, ரயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் மறைமலை நகரில், ரூ34.09 கோடி மதிப்பீட்டில் செட்டிப் புண்ணியத்தில் ரூ31.44 கோடி , சோத்து ப்பாக்கத்தில் ரூ31.87 கோடி என மொத்தம் ரூ97.4 கோடி மதிப்பீட்டில்  ரயில்வே மேம்பாலம் கட்ட ரயில்வே நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்தது,  இப்பணியை, பிரதமர் நரேந்திர மோடி, திங்களன்று (பிப். 26) காணொளி காட்சி  மூலம் இதனை துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் க.செல்வம், செங்கல் பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் மு.பாபு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ரயில்வே அதிகாரிகள்  இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர்.