கடலூர், ஜூன் 3-
ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்த கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பற்றிய விபரங் களை அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு அறை திறக்கப் பட்டுள்ளது.கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04142-220700 ஆகிய எண்க ளில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித் துள்ளார்.