புதுச்சேரி, ஜன.6- வானொலி முதுநிலை அறிவிப்பாளர் கவிஞர் உமாமோகன் காலமானார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக் குழு சிறப்பு அழைப்பாளரும்,அகில இந்திய வானொலியின் புதுச்சேரி பிரிவில் பணி யாற்றி வந்த வானொலி முதுநிலை அறிவிப்பாளர் தோழர் உமாமோகன் (வயது 59) மாரடைப்பால் திங்களன்று (ஜன.6) கால மானார். புதுச்சேரி குருமாம் பெட் பகுதியில் அமைந்துள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது உடலுக்கு சிபி எம் புதுச்சேரி மாநில செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், பெருமாள், கலியமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் சரவணன், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநில பொருளாளர் சைதை ஜே, புதுச்சேரி தலைவர் உமாஅமர்நாத் மற்றும் எழுத்தாளர்கள், கலை ஞர்கள் திரளாக சென்று அன்னாரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது இறுதி நிகழ்ச்சி இன்று காலை அய்யங்குட்டி பாளையம் இடுகாட்டில் நடைபெறுகிறது.