அம்பத்தூர், ஜன. 27- சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் அம்பத்தூர் 7ஆவது மண்டலச் செயலாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அம்பத்தூர் பகுதிக் குழு உறுப்பினருமான தோழர் ஆர்.குப்புசாமி ஞாயிறன்று (ஜன. 26) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் மாநில குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், வி.ஜானகிராமன், எல்.பி.சரவணத்தமிழன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார், அம்பத்தூர் பகுதிச் செயலாளர் ஆர்.கோபி, நிர்வாகிகள் க.உதயா, சி.சுந்தரராஜ், ஜி.மூர்த்தி, எம்.பகத்சிங், எம்.சிவராமன், இ.பாக்கியம், சி.ஆனந்த், க.பிரபாகரன், ஜெ.ரவி, வி.கிருஷ்ணசாமி, கோ.ஜான்சி, வேலு, பாபு, கருணாகரன், செங்கொடி சங்கத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசலு, நிர்வாகிகள் சுந்தரம், ராஜன், ராஜேந்திரன், வரதராஜன், ரோசய்யா, யாகூப், சாலமன் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் மாலை 5 மணியளவில் திருநின்றவூர் நெமிலிச்சேரி பிரகாஷ் நகரில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.