சென்னை, ஜன 25- எண்ணூரில் அமோனியா வாயு வெளி யேற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நுரையீரல் பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். திருவொற்றியூர் டி.எச்.சாலையில் தனியார் பங்களிப்புடன் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை செயல்படுகிறது. பல்வேறு தொழிற்சாலைகள் இந்த மருத்துவமனைக்கு தங்களது சமூக பாதுகாப்பு நிதியில் இருந்து உதவி செய்து வருகின்றனர். ஆனால் இங்கு போதிய மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இங்கு கண் தொடர்பான சிகிச்சை மற்றும் போதிய மருத்துவ உபகரணங்கள் வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதையடுத்து எம்ஆர்எப் நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு நிதியில் இருந்து 55 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கண் அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்கப் பட்டன. எச்.பி.சி.எல் நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு நிதியில் இருந்து 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ உபகர ணங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து சுகா தாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண் அறுவை சிகிச்சை அரங்கத்தை வியாழனன்று துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் தொடர்ச்சியாக தொடங் கப்பட்டு வருகிறது. இங்கு ஏற்கனவே டயாலிசிஸ் மையம் தொடங்கப்பட்டுள்ளது என்றார். தற்போது தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் கண் அறுவை சிகிச்சை மையம், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற அதிநவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள் ளன. இங்கு கூடுதல் மருத்துவர்களை நியமிப்பதற்கும், 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்களிடம் ஆலோ சனை பெறாமல் தன்னிச்சையாக சிகிச்சை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் எண்ணூ ரில் வாயு கசிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு நுரையீரல் பரிசோதனை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது என்றும் அமைச்சர் கூறினார். இதில் வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.சங்கர், மாதவரம் எஸ்.சுதர்சனம், மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, மாமன்ற உறுப்பினர் சரண்யா, பகுதிச் செயலாளர் வை.மா.அருள்தா சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.