districts

img

கடலூர் - புதுவை போக்குவரத்து துண்டிப்பு

கடலூர்,டிச.3- வெள்ள சீற்றத்தால் கங்கணாங் குப்பம் தேசிய நெடுஞ்சாலை கடுமை யாக சேதமடைந்தது. இரண்டாவது நாளாக கடலூர்-புதுச்சேரி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள் ளது. சாத்தனூர் அணை நிரம்பியதை அடுத்து தென்பெண்ணையாற்றில் உபரி தண்ணீர்  திறக்கப்பட்டது. கடலூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் கரை உடைபட்டதால் கங்கணாங்குப்பம் தேசிய நெடுஞ்சாலை மீது சீறிப் பாய்ந்தது.  தரமற்ற முறையில் போடப் பட்டிருந்தால், நீரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தார் சாலை  தோசை போல் திருப்பி போடப்பட்டி ருந்தது. அதிக அளவு வெள்ள நீர் சென்ற போது போக்குவரத்து துண்டி க்கப்பட்டது. புதுச்சேரி,சென்னை, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடலூர், சிதம்பரம் பகுதியில் இருந்து செல்லும் பேருந்து மற்றும் வாகனங்கள் மாற்றுப்  பாதையில் திருப்பி விடப்பட்டது. செவ்வாய்க்கிழமை (டிச.3) சாலையில் தண்ணீர் வடிந்த நிலையில் சாலை சேதத்தால் போக்குவரத்து திறந்து விடப்படவில்லை. மேலும் கடலூர்-புதுச்சேரி எல்லையில் கன்னி கோவில் என்ற இடத்தில் ஏரி திறக்கப்பட்ட நிலை யில் அதிக அளவு தண்ணீர் சென்ற தால் போக்குவரத்து துண்டிக்கப்பட் டுள்ளது.