districts

img

சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு புதுவை முதல்வர் மாலை அணிவிப்பு

புதுச்சேரி,டிச.6- சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்  நினைவு தினத்தை யொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை எதிரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன்,தேனி ஜெயக்குமார், சாய் சரவணன் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்  டாக்டர்  அம்பேத்கர் உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  தீண்டாமை ஒழிப்பு முன்னணி அம்பேத்கர் நினைவு தினத்தை யொட்டி அவரது சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி மாநிலக் குழு சார்பில் மாநிலம் முழுவதும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவை எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாநிலத் தலைவர் கொளஞ்சியப்பன் தலை மையில் மாலை அணிவித்தனர். சிபிஎம் மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், பிரபுராஜ் மற்றும் முன்னணியின்  செயலாளர் வழக்கறிஞர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இதேப்போல் மதகடிப்பட்டு, பாகூர் உட்பட பல்வேறு பகுதிகளில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.